சிகிச்சையின் போது அலட்சியமாக இருந்து நோயாளி மரணித்தால் … டாக்டரை கைது செய்ய தடை!

sylencrababu - 2026

சிகிச்சையின் போது அலட்சியம் காரணமாக நோயாளி இறந்து விட்டார் என்ற குற்றச்சாட்டில் டாக்டரை கைது செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி., சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிகிச்சையின் போது நோயாளி மரணம் அடைந்து விட்டார். இதற்கு டாக்டரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவே காரணம். டாக்டரை இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையங்களில் புகார் அளிப்பர். அப்போது, காவல் நிலைய பொறுப்பில் இருக்கும் அதிகாரி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அத்தகைய சூழ்நிலையில், விசாரணை அதிகாரி வழக்குப்பதிவு செய்யும் முன், முழுமையான விசாரணை நடத்தி, வாய்மொழி மற்றும் ஆவண ஆதாரங்களை திரட்ட வேண்டும்

மூத்த அரசு டாக்டரிடம் குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர்களிடம் வல்லுனர் கருத்தை பெற வேண்டும்

குற்றச் செயல் உறுதி செய்யப்பட்டால் மேல் நடவடிக்கைக்கு முன் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சட்ட ஆலோசனை பெற வேண்டும்

சிகிச்சையின் போது அலட்சியமாக நடந்து கொண்டதாக டாக்டர் மீது குற்றம் சாட்டப்பட்டால் மற்ற வழக்குகளைப் போல கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை

வழக்குப் பதிவு செய்வதற்கு முன் வழக்கில் தொடர்புடைய அனைத்து சாட்சிகளையும் சம்பந்தப்பட்ட கமிஷனர்கள் மாவட்ட எஸ்.பி.,க்கள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்

வழக்கின் விவரங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் குற்றம் நடைபெற்ற சூழ்நிலை ஆகியவை தொடர்பான விரைவு அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் டிஜிபி.,க்கு அனுப்ப வேண்டும் – என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அண்மைக் காலமாக மருத்துவமனை குறித்த செய்திகள், குறிப்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சூழலில் திடீர் நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ள சூழலில் திடீரென வெளியிடப்பட்ட டிஜிபி.,யின் செய்திக் குறிப்பினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், சமூகத்தளங்களில் விவாதப் பொருளும் ஆகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories