இறப்பதற்கு முன் இது தான் நடந்தது.. சுஷாந்தின் ஆவி கூறியது என்ன?

Published:

sushanth-2

கடந்த ஜூன் 14-ஆம் தேதி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்கும் வகையில், Paranormal expert என அழைக்கப்படும் அமானுஷ்ய நிபுணர் ஸ்டீவ் ஹஃப் சுஷாந்த் சிங் ஆன்மாவுடன் பேசும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி, Spirit box வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ‘இன்று நான் சுஷாந்த்தின் ஆன்மாவுடன் இணைப்பு ஏற்படுத்த முயற்சிக்கிறேன். பேசுமாறு கேட்டுக்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்’ எனத் தொடங்குகிறார்.

sushanth-3

ஸ்டீவ், ‘உங்கள் ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் எதையாவது சொல்ல விரும்புகிறீர்களா?’ எனக் கேட்கிறார். ‘ஒளியில் இருக்கிறீர்களா’? எனக் கேட்கிறார். ‘ஒளியில் இருக்கிறேன்’ என்கிறது அக்குரல்.

இரண்டாவது வீடியோவில், ‘உங்களை யாரும் கொலை செய்தார்களா’ எனக் கேட்கிறார், இறப்பதற்கு முந்தைய இரவு என்ன செய்தீர்கள் எனக் கேட்கிறார். ‘பெரிய மனிதர்களுடன் விவாதம்’ என்கிறது அக்குரல். உரையாடலை முடிப்பதற்கு முன்னதாக எதையாவது கூற விரும்புகிறீர்களா என்கிறார் ஸ்டீவ். ‘கொஞ்சம் அன்பு வேண்டும்’ என்கிறது அக்குரல்.

sushanth-1-1

ஆன்மாவுடன் பேசும் இந்த ஸ்பிரிட் பாக்ஸ் முறை மீது பலருக்கும் பல மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், சுஷாந்த்தின் ரசிகர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து நெகிழ்ச்சியும், நினைவுகூர்ந்தும் எழுதி வருகிறார்கள்.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

“நான் விரைவில் மற்றொரு அமர்வைச் செய்வேன், அதில் இன்னும் பல ஆழமான கேள்விகள் கேட்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.

அவரது ஹஃப் வலைத்தளமான huffparanormal.com படி, “அவர் ஒரு புகைப்படக்காரர், வலைப்பதிவு உரிமையாளர், அமானுட ஆராய்ச்சியாளர் மற்றும் இறந்தவர்களுடன் இணைக்க உதவும் சில சக்திவாய்ந்த சாதனங்களை கண்டுபிடித்தவர், தி போர்டல் மற்றும் தி வொண்டர் பாக்ஸ். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் என்ன செய்கிறார் இறுதியாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. “

Related articles

Recent articles

spot_img