December 6, 2025, 7:55 PM
26.8 C
Chennai

குழந்தையை கடத்த முயன்ற இருவர்! ஒற்றையாக போராடி மீட்ட தாய்! குவியும் பாராட்டு! வைரல் வீடியோ!

baby-kidnap

தண்ணீர் கேட்டு குழந்தையை கடத்த முயன்ற திருடர்களை தாய் தூரத்தி பிடித்து மீட்ட சம்பவம் சிசிடிவி காமெராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.

தில்லியில் உள்ள ஷகர்பூர் பகுதியை சேர்ந்தவர் உஷா. இவர் தனது குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டுபேர் உஷாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

இருவரும் தலை கவசம் அணிந்திருந்ததால் வந்தவர்கள் யார் என்று உஷாவால் அடையாளம் காணமுடியவில்லை.

இந்நிலையில், தண்ணீர் எடுப்பதற்காக உஷா வீட்டிற்குள் சென்றபோது வீட்டின் வெளியே வெளியாடிக் கொண்டிருந்த அவரது 4 வயது பெண் குழந்தையை இருவரும் இருசக்கர வாகனத்தில் கடத்த முயற்சித்தனர்.

இந்த காட்சியை கண்டதும் உடனடியாக துணிச்சலாக செயல்பட்டார். அவர்களிடம் போராடி சண்டையிட்டு குழந்தையை காப்பாற்றியதோடு, அவர்கள் தப்பிவிடக்கூடாது என இருசக்கர வாகனத்தையும் இழுத்து தடுக்க முயன்றார்.

baby-kidnap-1

இதனால் ஒருவன் வாகனத்தில் இருங்கி நடந்தே தப்பியோட, மற்றொருவன் நீண்ட நேரம் போராடி அந்த வீர பெண்மனியிடம் இருந்து தப்பித்து தலைதெறிக்க ஓடினார். இருவரையும் துரத்தியபடி அருகில் வசிப்பவர் ஓட, மற்றொரு இளைஞரோ சமயோஜிதமாக செயல்பட்டு இருசக்கர வாகனத்தை சாய்த்து தடுத்து நிறுத்தினார். இருப்பினும், கடத்தல்காரர்கள் இருவரும் ஹெல்மெட்டால் தாக்கிவிட்டு, அவர்களிடம் இருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என தலைதெறிக்க ஓடினர். இந்தகாட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடத்தல்காரர்கள் இருவரும் விட்டுச்சென்ற பையில் இருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கி, 4 தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார்,இருசக்கர வாகன எண் மற்றும் சிசிடிவி காட்சிகளை கொண்டு தீரஜ் என்பவரை கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில், குழந்தையின் பெரியப்பாதான் தீரஜ் என்பது தெரியவந்துள்ளது. துணி வியாபாரியான குழந்தையின் தந்தையிடம் இருந்து 35 லட்சம் ரூபாய் பணம் பறிக்கும் நோக்கில் கடத்த முயன்றது விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து தீரஜ், அவருக்கு உதவிய நண்பர் ஒருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடத்தல் சம்பவத்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போகாமல், துணிச்சலாக சண்டையிட்டு குழந்தையை மீட்ட தாய்க்கும், எது நடந்தாலும் நமக்கென்ன என்ற பலருக்கு மத்தியிலும் இருவரையும் விரட்டிப் பிடிக்க முயன்ற அக்கம் பக்கத்தினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories