வாஞ்சி மணியாச்சியில் வாஞ்சிக்கு சிலை அமைக்க பஜ்ரங் தள் மனு!

maniachi-vanchinathan-petition
maniachi-vanchinathan-petition

சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிர்த் தியாகம் செய்த இடமான மணியாச்சி ரயில் நிலைய பகுதியில், வாஞ்சிநாதனுக்கு சிலை அமைக்க வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது.

பஜ்ரங்தள் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் நம்பி ராஜா இது குறித்து அளித்துள்ள மனுவில் இவ்வாறு கோரியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்டம் சார்பு ஆட்சியர் அலுவலகம் வருவாய் கோட்டாட்சியரிடம் அவர் அளித்துள்ள மனுவில், நம் தேசத்தின் விடுதலைக்காக இன்னுயிர் நீத்த ஒப்பற்ற தலைவர் மாவீரர் ஐயா வீரவாஞ்சிநாதன் அவர்களுக்கு திரு உருவ சிலை அவரது நினைவிடத்தில் அமைக்க வேண்டும்.

நான் விஸ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தள் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளராக உள்ளேன். இந்த வருடம் ஜூன் 17ஆம் தேதி அன்று சுதந்திர போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் அவர்களின் நினைவு நாள் நம் மாவட்டத்தில் மணியாச்சி ரயில் நிலையம் எதிரே மணி மண்டபத்தில் கடைப்பிடிக்கப் பட்டது. ஆனால் இங்கே நினைவு மணி மண்டபத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனவேதான் இந்த வருடம் நினைவஞ்சலி அரசின் சார்பாக நடைபெறவில்லை இது தேச பக்தர்களின் மனம் வேதனை அடையச் செய்கிறது.

எனவே சுதந்திரப் போராட்ட வீரர் வீர வாஞ்சி நாதனுக்கு முழு உருவ வெண்கல சிலையை மணி மண்டபத்தில் வைத்து மணி மண்டபத்திற்கான அடிப்படை வசதிகளான பெரிய பெயர்ப் பலகை வரலாற்று ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு அரியவகை புகைப்படங்கள் புத்தகங்கள் வீர வாஞ்சிநாதனின் உயிர்த் தியாகத்தைப் போற்றும் வகையில் அங்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும்

இதுவே தேசபக்தர்களின் கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தேச பக்தர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக வீரவாஞ்சிநாதன் அவர்களின் முழு உருவ வெண்கல சிலை மணிமண்டபத்தில் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிடில், தேச பக்தர்கள் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்த விஷ்வ ஹிந்து பரிஷத் முடிவு செய்துள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் .. என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

  • செய்தி: அ.முத்துராமன், நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories