7வது முறையாக யாசகம் பெற்று ரூ.10,000; முதியவர் பூல்பாண்டியன் வழங்கல்!

poolpandian madurai - 2026

கொரோனாவால் உலகமே முடங்கி உள்ள நிலையில், பிறரிடம் யாசகம் பெற்று 7வது முறையாக மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் இன்று (31.07.2020) வழங்கியுள்ளார், தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன் எனும் 65 வயது முதியவர்!

முதன் முதலாக மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் கடந்த 18.05.2020 அன்று கொரோனா நிவாரண நிதியாக ரூ.10,000 வழங்கினார். பின்னர் தொடர்ந்து 7 முறை இது போல் ரூ. 10 ஆயிரமாக யாசகம் பெற்ற பணத்தை வழங்கினார். இதுவரை இவ்வாறு ரூ.70,000 மதுரைக்கான நிவாரண நிதியாக இவர் வழங்கியுள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக ஊர் ஊராக யாசகம் எடுத்து வரும் பூல்பாண்டியன், தான் பெறும் யாசகப் பணத்தின் பெரும் பகுதியை பல்வேறு நலத்திட்டங்களுக்கு கொடுத்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களிலும் செய்தி வந்துள்ளது.

குறிப்பாக குமரி முதல் காஷ்மீர் வரை 400 பள்ளிகளுக்கு ஒரு பள்ளிக்கு தலா ரூ.5,000 வீதம் என பிரித்துக் கொடுத்து அப்பள்ளிகளுக்குத் தேவையான நாற்காலி மேசைகள், குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் போன்றவைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். மும்பையில் ஒரே நாளில் 20,000 மரக் கன்றுகள் வழங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

தன் வாழ்வில் பெரும் பகுதியை யாசகம் பெற்றே வாழ்ந்துள்ள பூல்பாண்டியன், அந்தப் பணத்தை சுயமாக தனக்கே வைத்துக் கொள்ளாமல், அது ஏழை, எளிய மக்களுக்கும், இந்த சமூகத்திற்கும் பயன்பட வேண்டும் என்று பல்வேறு உதவிகள் செய்தார். எனினும், கொரோனா காலத்தில் ரூ.10,000 அவர் முதல் முறையாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது அனைவரது பாராட்டையும் பெற்றது.

தொடர்ந்து ஊக்கத்துடன், 7 முறை இதுபோல் ஆட்சியர் அலுவலகத்தில் ரூ. 70 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியில் சேர்த்துள்ளார் பூல்பாண்டியன்!

  • செய்தி: ரவிசந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories