எஸ்பிபி உடல்நிலை: எஸ்பி சரண் வெளியிட்ட வீடியோ!

spb-in-ventilator

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி அவரின் சிகிச்சை பெற்று வருகிறார்.

2 நாட்களுக்கு முன்பு அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பாகவும், தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட வருவதாக செய்திகள் வெளியானது.

இது, இசை ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, இவர் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

அன்று மாலை அவரின் மகன் எஸ்.பி.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘ என் அப்பாவின் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. அவரது இதயம் மற்றும் நுரையீரல் நன்றாக இயங்குகிறது. நேற்றை விட அவர் இன்று நன்றாகவே இருக்கிறார். அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது தினமும் அப்டேட் கொடுக்கும் விஷயம் அல்ல. அவரின் உடல் நிலை மெதுவாகத்தான் சரியாகும்’ எனக்கூறியிருந்தார்.

எஸ்.பி.பியின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்காக எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் நீண்ட நாட்களுக்கு அவருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்பதால் மருத்துவமனையின் 3வது மாடியில் MICU எனப்படும் மிகவும் தீவிரமான சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது 6வது மாடியில் அவருக்கென பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட அறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அவரின் மகன் சரண் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் ‘ என் தந்தை முன்பை விட தற்போது நலமாக இருக்கிறார். கண்கள் திறந்து பார்க்கிறார். எங்களில் சிலரை அவர் அடையாளம் காண்கிறார். தற்போது மூச்சுத்திணறல் எதுவுமில்லை. அதே நேரம் அவர் இன்னும் சில நாட்கள் அல்லது ஒரு வாரம் சிகிச்சை பெறுவார்

.அதன்பின் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார். அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியையும், மருத்துவர்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி. தொடர்ந்து பிரார்த்திப்போம்’ என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories