அம்பயர் ஆடிய ஆட்டம்! வெறுத்துப் போய் டிவிட்டிய சேவாக், ப்ரீத்தி ஜிந்தா!

veeredra-sehwag-twitter-picture
veeredra-sehwag-twitter-picture எல்லைக் கோட்டைத் தொட்ட ஜோர்டன் : சேவாக் ட்விட்டரில் வெளியிட்ட படம்

துபையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி்க்கு அநீதி இழைத்து ஒரு ரன் கோல்மால் செய்து தோற்பதற்கு காரணமாக இருந்த நடுவர் நிதின் மேனனுக்கே ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்கலாம் என்று முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் டிவிட்டி, திட்டியுள்ளார்.

இதில் ஒரு சுவாரஸ்யம், சேவாக் முன்னாள் டெல்லி டேர் டெவில் கேப்டன். அவர் பரிந்து கொண்டு பேசியது பஞ்சாப் அணிக்கு. இப்படி கிரிக்கெட் நியாய தர்மத்தை சேவா வெளிப்படுத்தியுள்ளது பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.

துபையில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது டெல்லி கேபிடல்ஸ். முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி20 ஓவர்ளில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் ஆட்டம் சமனில் முடிந்து சூப்பர் ஓவருக்குச் சென்றது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி டல்லடித்தது. வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து இரு விக்கெட்டுகளை பஞ்சாப் அணி இழந்தது. 3 ரன்களை அல்வா துண்டு கணக்காக எடுத்து டெல்லி கேபிடல்ஸ் எளிதாக வெற்றியைச் சுவைத்தது.

முன்னதாக, இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி ஒரு ரன் கூடுதலாக எடுக்காமல் போனதால் ஆட்டம் சமனில் முடிந்தது. ஆனால் சூப்பர் ஓவருக்கு முன்பாக, மயங்க் அகர்வாலும், ஜோர்டானும் களத்தில் இருந்தனர். ரபாடா வீசிய 19-வது ஓவரை சந்தித்த ஜோர்டான் ஸ்குயர் லெக் திசையில் தட்டிவிட்டு இரு ரன்கள் ஓடினார்.

ஆனால் வில்லன் போல், லெக் அம்ப்யர் நிதின் மேனன் வேகமாக ஓடிவந்தார். ஜோர்டன் 2-வது ரன் ஓடும்போது கோட்டை சரியாகத் தொடவில்லை. ஆதலால், ஒரு ரன் மட்டுமே வழங்க முடியும் என்றார். ஆனால், மூன்றாவது நடுவர் டி.வி. ரீப்ளேயில் பார்த்தபோது, ஜோர்டன் தான் ஓடிய இரு ரன்களையும் கிரீசுக்கு உள்ளே பேட்டை வைத்து தொட்டுவிட்டுத்தான் ஓடியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

எனவே நடுவரின் தவறான தீர்ப்பால் ஒரு ரன் பஞ்சாப் அணிக்கு வேண்டுமென்றே மறுக்கப்பட்டது. அந்த ஒரு ரன் கிடைத்திருந்தால், பஞ்சாப் அணி தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றிருக்கும். இந்த ஒரு ரன் இல்லாமல் போனதால் தான் ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்குச் சென்றது.

நடுவரின் தவறான தீ்ர்ப்பு குறித்து வீரேந்திர சேவாக் ட்வி்ட்டரில் கடுமையாக திட்டியுள்ளார் . “ ஆட்ட நாயகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விதத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஜோர்டான் இரு ரன்கள் ஓடியதில் அதில் ஒரு ரன்னை மறுத்து அறிவித்த நடுவருக்குத்தான் ஆட்ட நாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்து, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை ப்ர்தித் ஜிந்தா இது குறித்து கடுமையாக சாடியுள்ளார்.

ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில் “கொரோனா காலத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பயணித்து துபை வந்து, 6 நாட்கள் தனிமைப் படுத்திக்கொண்டேன். 5 முறை கொரோனா பரிசோதனையும் எனக்கு எடுக்கப்பட்டது. ஆனால், ஒரு ரன் குறைவாக கொடுக்கப்பட்டது எனக்கு வேதனையைத் தருகிறது.

இதுபோன்ற சூழலில் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தாவிட்டால் தொழில்நுட்பம் இருப்பதில் என்ன அர்த்தம். இந்த நேரத்தில் பிசிசிஐ புதிய விதிகளை அறிமுகப்படுத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் இது போன்று நடக்கக்கூடாது” என காட்டத்துடன் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories