ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி! பிறகு..?

Published:

bear-wake-man
bear-wake-man

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒருவரை கரடி வந்து தட்டி எழுப்பியது. விழித்துப் பார்த்தவர், என்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.

அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த நபரை அங்கு வந்த கரடி எழுப்பி விட்ட இந்தச் சம்பவம் வைரலாகி வருகிறது. இந்த விந்தையான சம்பவம் அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்சில் நடந்தது.

மாத்யூ பேட் என்பவர் ஒரு நீச்சல் குளத்தின் அருகில் அக்கடா என்று தூங்கிக்கொண்டிருந்தார். அமைதியாக இருந்த அந்த இடத்திற்கு மெதுவாக ஒரு கரடி வந்தது. நீச்சல் குளத்தின் அருகில் அங்குமிங்கும் அலைந்து அதிலிருந்து தண்ணீர் குடித்தது.

அதன்பின் உறங்கிக் கொண்டிருந்த பேட் அருகில் வந்து அவர் காலை மோந்து பார்த்தது. அவர் அசையாமல் இருந்ததால் அது அவரது காலை தன் கையால் தொட்டு மெதுவாக எழுப்பியது. அதனால் தூக்கம் கலைந்து விழித்து கரடியைப் பார்த்து அதிர்ச்சியடைநதார் பேட். அங்கிருந்து கரடி ஒரே ஓட்டமாக ஓடி விட்டது.

இவை அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img