அடுத்து பொது சிவில் சட்டத்தை நோக்கி… மாநிலங்களவையில் அதிகரித்தது பாஜக., பலம்!

parliament
parliament

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடையும் நிலையில், இந்த 11 இடங்களை நிரப்புவதற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் மூலம் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக, இந்த 11 இடங்களுக்குமான உறுப்பினர்களைத் தேர்வு செய்ய, தேர்தல் நாள் நவம்பர் 9ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை திரும்ப பெறுவதற்கான காலம் அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள பத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பாஜக., சார்பில் 8 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஒருவரும், சமாஜ்வாதி கட்சி சார்பில் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக வேட்பாளர் நரேஷ் பன்சால் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இவர்களைத் தவிர வேறு யாரும் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், இந்த 11 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டனர்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

இந்த 11 பேரில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் ஒருவர். இதை அடுத்து மாநிலங்களவையில் பாஜக.,வின் பலம் அதிகரித்துள்ளது. தற்போது மக்களவையைப் போலவே மாநிலங்களவையிலும் பாஜக., தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

nia bill amitsha
nia bill amitsha

பாஜக.,வின் உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 92 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் வரலாற்றில் இல்லாத அளவு காங்கிரஸ் உறுப்பினர் எண்ணிக்கை 38 ஆக சரிந்துள்ளது.

பாஜக., மாநிலங்களவையில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளதால், கூட்டணிக் கட்சி மற்றும் தோழமைக் கட்சியின் ஆதரவுடன் இனி அரசு கொண்டு வரும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான வழி பிறந்துள்ளது.

பாஜக., தனது தேர்தல் அறிவிப்பாகவும், கொள்கையாகவும் கொண்டிருந்த மூன்று முக்கிய விஷயங்களில் இரண்டை ஏற்கெனவே நிறைவேற்றி விட்டது. அயோத்தி ராமர் கோவில், 370வது சட்டப்பிரிவு நீக்கம் ஆகியவை கடந்த இரு வருடங்களில் நிறைவேற்றப் பட்டுள்ள நிலையில், அடுத்து மூன்றாவது முக்கியக் கொள்கையான பொது சிவில் சட்டம் என்பதை சாத்தியமாக்கும் என்பதற்கான முன்னேற்பாடாக மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பை சுட்டிக் காட்டுகின்றனர்!

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories