December 5, 2025, 7:01 PM
26.7 C
Chennai

அடுத்து பொது சிவில் சட்டத்தை நோக்கி… மாநிலங்களவையில் அதிகரித்தது பாஜக., பலம்!

parliament
parliament

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடையும் நிலையில், இந்த 11 இடங்களை நிரப்புவதற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் மூலம் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக, இந்த 11 இடங்களுக்குமான உறுப்பினர்களைத் தேர்வு செய்ய, தேர்தல் நாள் நவம்பர் 9ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை திரும்ப பெறுவதற்கான காலம் அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள பத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பாஜக., சார்பில் 8 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஒருவரும், சமாஜ்வாதி கட்சி சார்பில் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக வேட்பாளர் நரேஷ் பன்சால் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இவர்களைத் தவிர வேறு யாரும் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், இந்த 11 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த 11 பேரில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் ஒருவர். இதை அடுத்து மாநிலங்களவையில் பாஜக.,வின் பலம் அதிகரித்துள்ளது. தற்போது மக்களவையைப் போலவே மாநிலங்களவையிலும் பாஜக., தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

nia bill amitsha
nia bill amitsha

பாஜக.,வின் உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 92 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் வரலாற்றில் இல்லாத அளவு காங்கிரஸ் உறுப்பினர் எண்ணிக்கை 38 ஆக சரிந்துள்ளது.

பாஜக., மாநிலங்களவையில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளதால், கூட்டணிக் கட்சி மற்றும் தோழமைக் கட்சியின் ஆதரவுடன் இனி அரசு கொண்டு வரும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான வழி பிறந்துள்ளது.

பாஜக., தனது தேர்தல் அறிவிப்பாகவும், கொள்கையாகவும் கொண்டிருந்த மூன்று முக்கிய விஷயங்களில் இரண்டை ஏற்கெனவே நிறைவேற்றி விட்டது. அயோத்தி ராமர் கோவில், 370வது சட்டப்பிரிவு நீக்கம் ஆகியவை கடந்த இரு வருடங்களில் நிறைவேற்றப் பட்டுள்ள நிலையில், அடுத்து மூன்றாவது முக்கியக் கொள்கையான பொது சிவில் சட்டம் என்பதை சாத்தியமாக்கும் என்பதற்கான முன்னேற்பாடாக மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பை சுட்டிக் காட்டுகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories