வெற்றிவேல் யாத்திரை… கட்டுப்பாடுகளுடன் திடீர் அனுமதி?! பாஜக., தொண்டர்கள் உற்சாகம்!

vetrivel-yatra-murugan
vetrivel-yatra-murugan

வெற்றிவேல் யாத்திரைக்கு கட்டுப்பாடுகளுடன் திடீரென அனுமதி வழங்கியுள்ளது மாநில அரசு இதை அடுத்து பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

முன்னதாக, வேலுடன் ”வெற்றிவேல் யாத்திரை” செல்ல முயன்ற பாஜகவினரை  நசரத்பேட்டையில் தடுத்து நிறுத்தியது தமிழக காவல்துறை! இருப்பினும், பாஜக., தலைவர் முருகனுடன் ஐந்து  வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கியது. வேல் யாத்திரை வாகனத்துடன் எல்.முருகன் திருத்தணி நோக்கி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொண்டர்களை உற்சாகப் படுத்தியது. 

வேல் யாத்திரைக்காக திருத்தணி நோக்கிச் சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை முதலில் தடுத்து நிறுத்திய  காவல்துறை பின் திடீரென அனுமதி அளித்தனர். பூந்தமல்லி அருகே எல்.முருகனை தடுத்து நிறுத்தக் காத்திருந்த காவல்துறையினர்,  வேல் யாத்திரை பிரசார வாகனத்துடன் 6 வாகனங்கள் உடன் செல்ல  அனுமதி அளித்தனர்.இதனால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வேல் யாத்திரையில் வாகனத்தில் அறுபடை வீடுகளுக்கும் 6 வேன்களில் செல்ல அரசு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். யாத்திரைக்கு முதலில் அனுமதி மறுத்த நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வேல் யாத்திரை வெற்றிவேல் யாத்திரையாக மாறியுள்ளது என்று பாஜக.,வினர் கூறினர்.

எனினும், கோயிலில் வழிபடச் செல்வதாக பாஜக., தலைவர் குறிப்பிட்டதால், வழிபாட்டுக்கு எவர் வேண்டுமானாலும் செல்லலாம் என்றும், யாத்திரையாக மட்டுமே செல்லக்கூடாது என்றும் கூறிய போலீஸார், குறைந்த நபர்களுடன் கோயிலுக்குச் செல்ல அனுமதிப்பதாகக் கூறினர். எனவே வேல்யாத்திரைக்கு அனுமதி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், வழிபடுவதற்கான அனுமதி என்று மட்டுமே சொல்லலாம் என்றும் குறிப்பிட்டனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
murugan-vel-yatra
murugan-vel-yatra

முன்னதாக, தமிழகத்தில் தடையை மீறி யாத்திரையை நடத்தவும், கைது செய்தால் மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் பாஜக., திட்டமிட்டிருந்தது.

திட்டமிட்டபடி யாத்திரையை தொடங்குவோம் என்றும், யாத்திரையை தொடங்கும் போது போலீசார் கைது செய்தால், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக., தலைமை உத்தரவிட்டிருந்தது. யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டால் ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்றும், இல்லாவிடில் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் அளிக்கப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories