வெற்றிவேல் யாத்திரை… கட்டுப்பாடுகளுடன் திடீர் அனுமதி?! பாஜக., தொண்டர்கள் உற்சாகம்!

vetrivel-yatra-murugan
vetrivel-yatra-murugan

வெற்றிவேல் யாத்திரைக்கு கட்டுப்பாடுகளுடன் திடீரென அனுமதி வழங்கியுள்ளது மாநில அரசு இதை அடுத்து பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

முன்னதாக, வேலுடன் ”வெற்றிவேல் யாத்திரை” செல்ல முயன்ற பாஜகவினரை  நசரத்பேட்டையில் தடுத்து நிறுத்தியது தமிழக காவல்துறை! இருப்பினும், பாஜக., தலைவர் முருகனுடன் ஐந்து  வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கியது. வேல் யாத்திரை வாகனத்துடன் எல்.முருகன் திருத்தணி நோக்கி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொண்டர்களை உற்சாகப் படுத்தியது. 

வேல் யாத்திரைக்காக திருத்தணி நோக்கிச் சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை முதலில் தடுத்து நிறுத்திய  காவல்துறை பின் திடீரென அனுமதி அளித்தனர். பூந்தமல்லி அருகே எல்.முருகனை தடுத்து நிறுத்தக் காத்திருந்த காவல்துறையினர்,  வேல் யாத்திரை பிரசார வாகனத்துடன் 6 வாகனங்கள் உடன் செல்ல  அனுமதி அளித்தனர்.இதனால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வேல் யாத்திரையில் வாகனத்தில் அறுபடை வீடுகளுக்கும் 6 வேன்களில் செல்ல அரசு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். யாத்திரைக்கு முதலில் அனுமதி மறுத்த நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வேல் யாத்திரை வெற்றிவேல் யாத்திரையாக மாறியுள்ளது என்று பாஜக.,வினர் கூறினர்.

எனினும், கோயிலில் வழிபடச் செல்வதாக பாஜக., தலைவர் குறிப்பிட்டதால், வழிபாட்டுக்கு எவர் வேண்டுமானாலும் செல்லலாம் என்றும், யாத்திரையாக மட்டுமே செல்லக்கூடாது என்றும் கூறிய போலீஸார், குறைந்த நபர்களுடன் கோயிலுக்குச் செல்ல அனுமதிப்பதாகக் கூறினர். எனவே வேல்யாத்திரைக்கு அனுமதி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், வழிபடுவதற்கான அனுமதி என்று மட்டுமே சொல்லலாம் என்றும் குறிப்பிட்டனர்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!
murugan-vel-yatra
murugan-vel-yatra

முன்னதாக, தமிழகத்தில் தடையை மீறி யாத்திரையை நடத்தவும், கைது செய்தால் மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் பாஜக., திட்டமிட்டிருந்தது.

திட்டமிட்டபடி யாத்திரையை தொடங்குவோம் என்றும், யாத்திரையை தொடங்கும் போது போலீசார் கைது செய்தால், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக., தலைமை உத்தரவிட்டிருந்தது. யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டால் ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்றும், இல்லாவிடில் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் அளிக்கப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories