தடை அதை உடை! வெற்றிவேல் வீரவேல்! முழக்கத்துடன் திருத்தணி நோக்கி ‘முருகன்’!

velyatra
velyatra

தடை அதை உடை… வெற்றி வேல் வீரவேல் என்ற முழக்கத்துடன், வேல்யாத்திரையை திருத்தணியில் இருந்து தொடங்க பாஜக., தலைவர் முருகன் திருத்தணி நோக்கி புறப்பட்டார்.

பாஜக., சார்பில் நடைபெறும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. கொரோனோ பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்த வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந் நிலையில், தடையை மீறி தமிழக பாஜக., சார்பில் நவ.6 முதல் டிச.6 வரை திருத்தணியில் தொடங்கி, திருச்செந்தூரில் முடிப்பதாக ‛வேல் யாத்திரை’ திட்டமிடப் பட்டுள்ளதாக தமிழக பாஜக., தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.

முன்னதாக, கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக வேல்யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ‛வேல் யாத்திரை தொடர்பாக அரசு பிறப்பிக்கும் உத்தரவுக்குப் பின் வழக்கு தொடரலாம்,’ எனக் கூறி வேல்யாத்திரைக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தது.

இருப்பினும், தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்க உள்ளதாக நேற்று பாஜக., தமிழக தலைமை அறிவித்தது. இதை அடுத்து இன்று காலை, கையில் வேலுடன் கோயம்பேட்டில் இருந்து கிளம்பினார் பாஜக., தமிழக தலைவர் எல்.முருகன். அவருடன் பாஜக., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் தொண்டர்கள் சூழ காரில் அணிவகுத்துச் சென்றனர்.

இந்த யாத்திரை குறித்து எல்.முருகன் குறிப்பிடுகையில், ‛கடவுளை வழிபடுவது எனது அடிப்படை உரிமை. அந்த அடிப்படையில் திருத்தணிக்குச் செல்கிறேன். கடவுள் முருகனின் துணை கொண்டு திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையைத் தொடங்குகிறோம்,’ என்றார்.

murugan-vel-yatra
murugan-vel-yatra

முன்னதாக, இன்று திருத்தணியில் பாஜக., தலைவர் கைது செய்யப்படும் பட்சத்தில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பெருமளவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பாஜக., திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories