தடை அதை உடை! வெற்றிவேல் வீரவேல்! முழக்கத்துடன் திருத்தணி நோக்கி ‘முருகன்’!

velyatra
velyatra

தடை அதை உடை… வெற்றி வேல் வீரவேல் என்ற முழக்கத்துடன், வேல்யாத்திரையை திருத்தணியில் இருந்து தொடங்க பாஜக., தலைவர் முருகன் திருத்தணி நோக்கி புறப்பட்டார்.

பாஜக., சார்பில் நடைபெறும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. கொரோனோ பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்த வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந் நிலையில், தடையை மீறி தமிழக பாஜக., சார்பில் நவ.6 முதல் டிச.6 வரை திருத்தணியில் தொடங்கி, திருச்செந்தூரில் முடிப்பதாக ‛வேல் யாத்திரை’ திட்டமிடப் பட்டுள்ளதாக தமிழக பாஜக., தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.

முன்னதாக, கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக வேல்யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ‛வேல் யாத்திரை தொடர்பாக அரசு பிறப்பிக்கும் உத்தரவுக்குப் பின் வழக்கு தொடரலாம்,’ எனக் கூறி வேல்யாத்திரைக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தது.

இருப்பினும், தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்க உள்ளதாக நேற்று பாஜக., தமிழக தலைமை அறிவித்தது. இதை அடுத்து இன்று காலை, கையில் வேலுடன் கோயம்பேட்டில் இருந்து கிளம்பினார் பாஜக., தமிழக தலைவர் எல்.முருகன். அவருடன் பாஜக., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் தொண்டர்கள் சூழ காரில் அணிவகுத்துச் சென்றனர்.

இந்த யாத்திரை குறித்து எல்.முருகன் குறிப்பிடுகையில், ‛கடவுளை வழிபடுவது எனது அடிப்படை உரிமை. அந்த அடிப்படையில் திருத்தணிக்குச் செல்கிறேன். கடவுள் முருகனின் துணை கொண்டு திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையைத் தொடங்குகிறோம்,’ என்றார்.

murugan-vel-yatra
murugan-vel-yatra

முன்னதாக, இன்று திருத்தணியில் பாஜக., தலைவர் கைது செய்யப்படும் பட்சத்தில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பெருமளவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பாஜக., திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories