சூடு பிடிக்கும் அரசியல்… 21ல் தமிழகம் வருகிறார் அமித்ஷா! ரஜினியுடன் சந்திப்பு?

amitsha-rajini
amitsha-rajini

தமிழக அரசியலில் அதிரடியாக களமிறங்குகிறார் உள்துறை அமைச்சரும் பாஜக., தலைவருமான அமித்ஷா! வரும் 21ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா, போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்திக்கிறார் என்று தகவல் வெளியானது. 

ஒரு நாள் பயணமாக வரும் சென்னை வரும்  அமித்ஷா ரஜினியை அரசியலில் இணைக்கும் புதிய திட்டத்துடன் வருவதாகக் கூறப் படுகிறது. இது குறித்து நிதின்கட்கரி மூலம் ரஜினிக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. 

ரஜினிகாந்த்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி – அமித்ஷா சந்திப்பு நடைபெறுகிறது என்றும், அப்போது ரஜினியின் அரசியல் நேரடி பயணத்திட்டம் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் கூறப் படுகிறது. இந்தப் புதிய திட்டத்திற்கு ரஜினி இசைவு தெரிவிப்பார் என்று பாஜக.,வினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.  

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக., தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா வரும் 21 ம் தேதி தமிழகம் வரவுள்ள செய்தி இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது 

amithsha-rajini
amithsha-rajini

தமிழகத்தில் பாஜக, தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், பாஜக.,வின் அரசியல் நடவடிக்கைகள் வேகமெடுத்தன. வேற்றுக் கட்சிகளில் இருந்து அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் பாஜகவில் பெருமளவில் இணைந்து வந்தனர் குறிப்பாக பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வந்த நடிகை குஷ்பு உள்பட சிலர் பாஜகவில் இணைந்தது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது

 தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் வேல்முருகன் யாத்திரை ஒன்றை தொடங்கி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஆனால் இந்த யாத்திரைக்கு  கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி தமிழக அரசு அனுமதி மறுத்தது 

எனினும் தமிழக அரசு விதித்த தடையை மீறி பல இடங்களில் வேல்யாத்திரை செல்ல பாஜக.,வினர் முயன்றனர். அதனால்,  கட்சித் தலைவர் எல்.முருகன் உள்பட கட்சி தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

இத்தகைய சூழ்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகிறார் இவர் தொடர்ந்து  சட்டசபை தேர்தலில் என்ன முடிவுகள் எடுக்க வேண்டும், பிரசார வியூகம் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தவுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories