சூடு பிடிக்கும் அரசியல்… 21ல் தமிழகம் வருகிறார் அமித்ஷா! ரஜினியுடன் சந்திப்பு?

amitsha-rajini
amitsha-rajini

தமிழக அரசியலில் அதிரடியாக களமிறங்குகிறார் உள்துறை அமைச்சரும் பாஜக., தலைவருமான அமித்ஷா! வரும் 21ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா, போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்திக்கிறார் என்று தகவல் வெளியானது. 

ஒரு நாள் பயணமாக வரும் சென்னை வரும்  அமித்ஷா ரஜினியை அரசியலில் இணைக்கும் புதிய திட்டத்துடன் வருவதாகக் கூறப் படுகிறது. இது குறித்து நிதின்கட்கரி மூலம் ரஜினிக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. 

ரஜினிகாந்த்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி – அமித்ஷா சந்திப்பு நடைபெறுகிறது என்றும், அப்போது ரஜினியின் அரசியல் நேரடி பயணத்திட்டம் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் கூறப் படுகிறது. இந்தப் புதிய திட்டத்திற்கு ரஜினி இசைவு தெரிவிப்பார் என்று பாஜக.,வினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.  

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக., தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா வரும் 21 ம் தேதி தமிழகம் வரவுள்ள செய்தி இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது 

amithsha-rajini
amithsha-rajini

தமிழகத்தில் பாஜக, தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், பாஜக.,வின் அரசியல் நடவடிக்கைகள் வேகமெடுத்தன. வேற்றுக் கட்சிகளில் இருந்து அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் பாஜகவில் பெருமளவில் இணைந்து வந்தனர் குறிப்பாக பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வந்த நடிகை குஷ்பு உள்பட சிலர் பாஜகவில் இணைந்தது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

 தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் வேல்முருகன் யாத்திரை ஒன்றை தொடங்கி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஆனால் இந்த யாத்திரைக்கு  கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி தமிழக அரசு அனுமதி மறுத்தது 

எனினும் தமிழக அரசு விதித்த தடையை மீறி பல இடங்களில் வேல்யாத்திரை செல்ல பாஜக.,வினர் முயன்றனர். அதனால்,  கட்சித் தலைவர் எல்.முருகன் உள்பட கட்சி தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

இத்தகைய சூழ்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகிறார் இவர் தொடர்ந்து  சட்டசபை தேர்தலில் என்ன முடிவுகள் எடுக்க வேண்டும், பிரசார வியூகம் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தவுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories