December 5, 2025, 2:01 PM
26.9 C
Chennai

கேரள மாநில பாஜக., பிரசார வாகனம் மீது திமுக.,வினர் தாக்குதல்! செங்கோட்டை அருகே பரபரப்பு!

kerala-bjp-protest-in-puliyarai
kerala-bjp-protest-in-puliyarai

தமிழக கேரள எல்லையில் கேரள மாநில பாஜக.,வினரின்  பிரச்சார வாகனம் மீது ‘மர்ம’ நபர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

கேரளாவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்வதற்காக, கேரள பா.ஜ.க.வின் பிரச்சார வாகனம் அச்சன்கோவிலில் இருந்து ஆரியங்காவு வரும்போது, தமிழ்நாடு எல்லையில் திமுக.,வைச் சேர்ந்த சிலர் பா.ஜ.க. கொடிகளை கிழித்தும், பிரச்சார வாகனத்தை சேதப்படுத்தியும் உள்ளனர். இது தொடர்பாக, காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால் நாளை தென்காசியில் பா.ஜ.க., சார்பில் மாவட்ட அளவில் போராட்டம் நடைபெறும் என்று தமிழக பாஜக., எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள அச்சன்கோவில் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு, தமிழகத்தின் செங்கோட்டை சாலை வழியாக, கேரள மாநிலத்தில் உள்ள ஆரியங்காவு பகுதிக்குச் சென்றுள்ளனர். அச்சன்கோயிலில் இருந்து ஆரியங்காவுக்குச் செல்ல தமிழகத்தின் செங்கோட்டை வழியிலான இந்த ஒரு பாதைதான் உள்ளது. 

இவ்வாறு திரும்பிச் சென்ற பாஜக., பிரசார வாகனத்தை கட்டளைக்குடியிருப்பு அருகே  கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களைக் கொண்ட கும்பல் ஓன்று தடுத்து நிறுத்தியது. தகாத வார்த்தைகளைப் பேசி, அந்த ஜீப்பில் இருந்த கொடிகளைக் கிழித்தும்,வாகனத்தின் முன்பு இருந்த சின்னத்தைக் கிழித்து  எறிந்தும் வன்முறையில் ஈடுபட்டது. மேலும், வாகனத்தில் வந்த ஓட்டுநர் சுபாஷ் மற்றும், அதில் இருந்த இன்னுமொரு நபரையும் தாக்க முயன்றது.

இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்த அவர்கள், சத்தம் போட்டுள்ளனர். இதை அடுத்து தகவல்   செங்கோட்டை போலீசாருக்குச் சென்றது. 

தகவலை அடுத்து விரைந்து வந்த செங்கோட்டை போலீஸார், நடந்த சம்பவம் குறித்து கேரள ஜீப் டிரைவரிடம்  விசாரித்தனர்.  

அப்போது, அந்த ஜீப், அச்சன்கோவில் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு செங்கோட்டை வழியாக ஆரியங்காவு செல்வதும், அந்த வாகனத்தை வழிமறித்து கொடிகளைக் கிழித்து எறிந்தது  திமுக.,வினர் என்றும், வன்முறையில் ஈடுபட்டவர்களின் வாகனத்தில் திமுக கொடி  இருந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் காரணமாக தமிழக கேரள எல்லையான கோட்டைவாசல்  பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஏராளமானோர் திரண்டு வந்தனர்.  தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்த பாஜக.,வினர்  திட்டமிட்டனர். 

இந்த நிலையில் அந்தப் பகுதிக்கு வந்த செங்கோட்டை காவல் ஆய்வாளர்  (பொறுப்பு) பாலமுருகன், தாக்குதலுக்கு உள்ளான வாகனத்தின் ஓட்டுநர் சுபாஷ், மற்றும் அவருடன் வந்த நபரையும் புளியரை, கோட்டைவாசல் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று அடையாளம் காட்டுமாறு கூறினர். அப்போது செங்கோட்டை திமுக., ஒன்றியச் செயலாளர் ரவிசங்கர் உள்ளிட்ட நபர்களை அடையாளம் காட்டியதாகக் கூறப் படுகிறது. 

இதை அடுத்து சம்பந்தப் பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகிறது. 

இந்தச் சம்பவத்தின் காரணமாக கேரள தமிழக எல்லைப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. கோட்டைவாசல் பகுதியில் தமிழக -கேரள போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  இரு மாநில எல்லைப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால்  பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, பாஜக., உள்ளிட்ட சில இந்து இயக்கங்களும் திமுக.வினரின் வன்முறைச் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் என்று அறிவித்ததால் தென்காசி மாவட்ட போலீஸார் உஷார் படுத்தப் பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories