சசிகலாவும் இளவரசியும் சிறையில் கற்றுக் கொண்ட ‘பாடம்’!

sasikala-ilavarasi
sasikala-ilavarasi

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா நடராஜன், தற்போது பயனுள்ள ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். அவர் கர்நாடக மாநில சிறையில் இருந்த காலத்தில், அம்மாநிலத்தின் மொழியான கன்னடத்தைக் கற்று, அதில் மூன்றாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றுள்ளாராம்!

சட்ட விரோதமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறையில் காலம் கழித்து வரும் சசிகலா நடராஜன் (69) தற்போது தண்டனைக் காலம் முடிந்து வெளிவரத் தயாராக உள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் அம்மாநில மொழியைக் கற்று, தனது அரசியல் வாழ்க்கைக்கு மேலும் ஒரு படியைக் கூடுதலாக்கிக் கொண்டிருக்கிறார்.

sasikala
sasikala

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு வந்த புதிதில் மன வருத்தத்துடன் எவருடனும் பேசாமல் ஒதுங்கியிருந்த சசிகலா, பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பி, சிறை ஊழியர்கள், சக கைதிகளுடன் இயல்பாகப் பழகினாராம். இந்நிலையில், சிறையில் இருந்து கொண்டு ஏதாவது கற்க வேண்டும் என்ற ஆவலில் கன்னட மொழியை எழுதப் படிக்க கற்றுக் கொண்டிருக்கிறார் சசிகலா.

கல்வி கற்காத கைதிகளுக்கு கல்வி கற்பிக்க சிறைக்கு வரும் ஆசிரியர்களிடம் கன்னடம் எழுத்துக்களைக் கற்றுள்ளார். பின்னர் கன்னடத்தில் உள்ள செய்திகளைப் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் கன்னட மொழித் தேர்வில் மூன்றாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றுள்ளார். மேலும், இவரது ஆர்வத்தால், இதே சிறையில் உள்ள சசிகலாவின் உறவினர் இளவரசியும் கன்னடம் கற்றுக் கொண்டிருக்கிறாராம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories