கிரைம் ரவுண்ட்ஸ்; நண்பர் மாதிரி போன்ல பேசி… ரூ.1.40 லட்சம் அபேஸ்..!

crime-beat
crime-beat

இரண்டு முறை முயன்று மூன்றாவது முறை தற்கொலை செய்து கொண்டவர் சாவு

மதுரை, டிச.10: இரண்டு முறை முயன்று மூன்றாவது முறை தற்கொலை செய்து கொண்டவர்கள் மரணம் அடைந்தனர்.

மதுரை அரசரடி வெள்ளை கண்ணு தியேட்டர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சூசை ஆரோக்கிய ஜார்ஜ் 29 இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது இதனால் ஏற்கனவே இரண்டு முறை தற்கொலை செய்ய முயன்று தப்பித்துவிட்டார் மூன்றாவது முறையாக நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இவரது சாவுகுறித்து எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை சின்னக்கடை வீதியில் 475 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது! போலீசார் அதிரடி!

மதுரை, டிச.10: மதுரை சின்னக்கடை வீதியில் பதுக்கி வைத்திருந்த 475 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

மதுரை சின்னக் கடை வீதி எழுத்தாணிக்கார தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தெற்குவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . போலீசார் அந்தப் பகுதியை கண்காணித்து சோதனை நடத்திய போது எழுத்தாணிக்கார தெருவில் 475  கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை பதுக்கி வைத்திருந்த அசோக்குமார் ஜெயின் 50 முத்துப்பாண்டி (53) சாய்ராம் (57) ஆகிய மூவரையும் கைது செய்து செய்தனர்.

மதுரை டிவிஎஸ் நகரில் தொலைபேசியில்  நண்பர் போல் பேசி ரூ.1 லட்சத்து நாற்பதாயிரம் மோசடி! போலீசார் விசாரணை!

மதுரை.டிச.10: டிவிஎஸ் நகரில் நண்பரைப் போல் தொலைபேசியில் பேசி ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் ரூபாய் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை டிவிஎஸ் நகர் துரைசாமி ரோட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (76) . சம்பவத்தன்று இவருக்கு தொலைபேசி ஒன்று வந்தது .அதில் அவருடைய நண்பரைப் போல் பேசி நம்ப வைத்து ரூபாய் ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் வங்கி மூலம் வாங்கி ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராமகிருஷ்ணன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவுசெயது மோசடி ஆசாமியைதேடி வருகின்றனர்.

மதுரை அழகப்பன் நகரில் கத்தி முனையில் வழிப்பறி!

மதுரை, டிச.10: மதுரை அழகப்பன் நகரில் கத்தி முனையில் வழிப்பறி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தினேஷ்குமார் 21 .இவர்அழகப்ப நகர் பாலாஜி தெரு சந்திப்பில் நடந்து சென்ற போது அவரை வழிமறித்த விளாச்சேரியை சேர்ந்த சையத் இஸ்மாயில் என்ற சதம் என்ற ஓட்டையன் 22 என்பவர் கத்தி முனையில் வழிமறித்து தினேஷ்குமார் வைத்திருந்த பணத்தை பறித்துச் சென்றுவிட்டார் இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ்குமார் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்ததில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத் இஸ்மாயில் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories