கிரைம் ரவுண்ட்ஸ்; நண்பர் மாதிரி போன்ல பேசி… ரூ.1.40 லட்சம் அபேஸ்..!

crime-beat
crime-beat

இரண்டு முறை முயன்று மூன்றாவது முறை தற்கொலை செய்து கொண்டவர் சாவு

மதுரை, டிச.10: இரண்டு முறை முயன்று மூன்றாவது முறை தற்கொலை செய்து கொண்டவர்கள் மரணம் அடைந்தனர்.

மதுரை அரசரடி வெள்ளை கண்ணு தியேட்டர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சூசை ஆரோக்கிய ஜார்ஜ் 29 இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது இதனால் ஏற்கனவே இரண்டு முறை தற்கொலை செய்ய முயன்று தப்பித்துவிட்டார் மூன்றாவது முறையாக நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இவரது சாவுகுறித்து எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை சின்னக்கடை வீதியில் 475 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது! போலீசார் அதிரடி!

மதுரை, டிச.10: மதுரை சின்னக்கடை வீதியில் பதுக்கி வைத்திருந்த 475 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

மதுரை சின்னக் கடை வீதி எழுத்தாணிக்கார தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தெற்குவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . போலீசார் அந்தப் பகுதியை கண்காணித்து சோதனை நடத்திய போது எழுத்தாணிக்கார தெருவில் 475  கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை பதுக்கி வைத்திருந்த அசோக்குமார் ஜெயின் 50 முத்துப்பாண்டி (53) சாய்ராம் (57) ஆகிய மூவரையும் கைது செய்து செய்தனர்.

மதுரை டிவிஎஸ் நகரில் தொலைபேசியில்  நண்பர் போல் பேசி ரூ.1 லட்சத்து நாற்பதாயிரம் மோசடி! போலீசார் விசாரணை!

மதுரை.டிச.10: டிவிஎஸ் நகரில் நண்பரைப் போல் தொலைபேசியில் பேசி ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் ரூபாய் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை டிவிஎஸ் நகர் துரைசாமி ரோட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (76) . சம்பவத்தன்று இவருக்கு தொலைபேசி ஒன்று வந்தது .அதில் அவருடைய நண்பரைப் போல் பேசி நம்ப வைத்து ரூபாய் ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் வங்கி மூலம் வாங்கி ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராமகிருஷ்ணன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவுசெயது மோசடி ஆசாமியைதேடி வருகின்றனர்.

மதுரை அழகப்பன் நகரில் கத்தி முனையில் வழிப்பறி!

மதுரை, டிச.10: மதுரை அழகப்பன் நகரில் கத்தி முனையில் வழிப்பறி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தினேஷ்குமார் 21 .இவர்அழகப்ப நகர் பாலாஜி தெரு சந்திப்பில் நடந்து சென்ற போது அவரை வழிமறித்த விளாச்சேரியை சேர்ந்த சையத் இஸ்மாயில் என்ற சதம் என்ற ஓட்டையன் 22 என்பவர் கத்தி முனையில் வழிமறித்து தினேஷ்குமார் வைத்திருந்த பணத்தை பறித்துச் சென்றுவிட்டார் இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ்குமார் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்ததில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத் இஸ்மாயில் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories