ஸ்ரீரங்கம் பரமபதவாசல் திறப்பின் போது மட்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

Published:

trichy-city-police
trichy-city-police

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா 15-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 25-ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அந்த விழாவிற்கு கொரோனா காரணமாக 24-ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து மறுநாள் சொர்க்கவாசல் அன்று காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்காக 450 போலீசார் சுழற்சி முறையிலும், சொர்க்கவாசல் திறப்பு அன்று 1,200 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img