February 6, 2025, 6:36 PM
28.1 C
Chennai

இன்று டிச.15; சர்தார் வல்லபபாய் பட்டேல் நினைவு நாள்!

patelstatue
patelstatue

தற்காலத்தில் தேசம், மாநிலம் என்பது தம் சொந்த சொத்தாக, தனியார் கம்பெனிகளாக செய்வதற்கும், தமக்குப் பிறகு தம் வாரிசுகளும் உறவினர்களும் அதனை ஆளுவதற்கும் மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் தலைவர்களே நமக்கு எங்கும் தென்படுகிறார்கள். அவர்களும், அவர்களை நம்புபவர்களும் சர்தார் வல்லபாய் பட்டேல் குறித்த இந்த சம்பவத்தை நம்புவார்களோ நம்பமாட்டார்களோ தெரியாது. ஆனால் அரசியல் தலைவர்களில் கூட விழுமியங்கள் இருந்த நாட்களில் நடைபெற்ற சம்பவம் ஆதலால் இது பலருக்கும் கண் விழிப்பாக இருக்கும்.

சர்தார் வல்லப பாய் பட்டேலுக்கு ஒரு பெண். மணி பென் பட்டேல். ஒரே ஒரு மகன் தஹ்யாபாய் பட்டேல்.

patel Gandhi nehrujpg
patel Gandhi nehrujpg

சர்தார் பட்டேல் பாரத துணை பிரதமராக இருந்த நாட்களில் அவருடைய புதல்வன் பம்பாயில் புகழ் பெற்ற தொழில் அதிபராக விளங்கினார். தந்தை எத்தகைய நேர்மையானவரோ அவருடைய மகன் அவ்வளவு நேர்மையற்றவராக இருந்தார். தந்தைக்குத் தெரியாமல் அவருடைய பதவியை முன்னிட்டுக் கொண்டு பல அக்கிரமங்களை செய்தார். பட்டேலுக்கு அந்த விஷயம் தெரிய வந்தது. உடனே அப்போதைய தொழிலாளர் துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் உள்ள செய்தியை படித்தால் சர்தார் பட்டேலின் நேர்மை என்ன என்பதும் தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும் தெரியவரும்.

” என்னுடைய மகனின் தொழிற்சாலையை குறித்தோ, அவருடைய நடத்தை குறித்தோ எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. அரசாங்கத்திலிருந்து என் மகன் மீதும் அவருடைய தொழிற்சாலை மீதும் எந்தவித நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்கும் நீங்கள் பின்வாங்க வேண்டாம். நீங்கள் எந்த நடவடிக்கை எடுத்துக்கொண்டாலும் நான் அதில் தலையிட மாட்டேன்” என்று அந்த கடிதத்தில் உள்ளது.

patel nizam
patel nizam

இப்போதைய அரசியல் வாதிகளுக்கு இது ஒரு பிரச்சாரத்திற்காக செய்த சடங்காக தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் நாம் இந்நாட்களில் பார்ப்பது இது போன்ற சடங்குகளை மட்டுமே.

ஆனால் அவர் நேர்மையையும் அவருடைய திடசங்கல்பத்தையும் சந்தேகப்படுபவர்களுக்காக ஒரு விஷயம் என்னவென்றால்… சர்தார் பட்டேல் அநீதியை கொஞ்சமும் ஏற்கக்கூடியவர் அல்ல. அவருடைய ஒரே மகனின் முகத்தை கூட பார்ப்பதற்கு அவர் நிராகரித்தார். தன்னுடைய இறுதி நாட்களில் தன் நண்பரின் வீட்டிலேயே தங்கி வசித்து அங்கேயே மரணமடைந்தார். இந்த நாட்களில் இது போன்ற அரசியல் தலைவர்களை நம்மால் யூகிக்க முடியுமா?

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது.

Topics

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது.

கெடுபிடி தடைகளைத் தகர்த்து, அதிர்ந்த திருப்பரங்குன்றம்; ஹெச்.ராஜா வீரமுழக்கம்!

நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு திருப்பரங்குன்றம் வந்த ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் ஆர்பாட்டம் ஏன் என்பது பற்றி உரை நிகழ்த்தினர்.

பஞ்சாங்கம் பிப்.04- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

உசிலம்பட்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

பாலமேடு அருகே 66 மேட்டுப்பட்டி உசிலம்பட்டியில்அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷே விழா நடைபெற்றது. 

Entertainment News

Popular Categories