இன்று டிச.15; சர்தார் வல்லபபாய் பட்டேல் நினைவு நாள்!

patelstatue
patelstatue

தற்காலத்தில் தேசம், மாநிலம் என்பது தம் சொந்த சொத்தாக, தனியார் கம்பெனிகளாக செய்வதற்கும், தமக்குப் பிறகு தம் வாரிசுகளும் உறவினர்களும் அதனை ஆளுவதற்கும் மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் தலைவர்களே நமக்கு எங்கும் தென்படுகிறார்கள். அவர்களும், அவர்களை நம்புபவர்களும் சர்தார் வல்லபாய் பட்டேல் குறித்த இந்த சம்பவத்தை நம்புவார்களோ நம்பமாட்டார்களோ தெரியாது. ஆனால் அரசியல் தலைவர்களில் கூட விழுமியங்கள் இருந்த நாட்களில் நடைபெற்ற சம்பவம் ஆதலால் இது பலருக்கும் கண் விழிப்பாக இருக்கும்.

சர்தார் வல்லப பாய் பட்டேலுக்கு ஒரு பெண். மணி பென் பட்டேல். ஒரே ஒரு மகன் தஹ்யாபாய் பட்டேல்.

patel Gandhi nehrujpg
patel Gandhi nehrujpg

சர்தார் பட்டேல் பாரத துணை பிரதமராக இருந்த நாட்களில் அவருடைய புதல்வன் பம்பாயில் புகழ் பெற்ற தொழில் அதிபராக விளங்கினார். தந்தை எத்தகைய நேர்மையானவரோ அவருடைய மகன் அவ்வளவு நேர்மையற்றவராக இருந்தார். தந்தைக்குத் தெரியாமல் அவருடைய பதவியை முன்னிட்டுக் கொண்டு பல அக்கிரமங்களை செய்தார். பட்டேலுக்கு அந்த விஷயம் தெரிய வந்தது. உடனே அப்போதைய தொழிலாளர் துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் உள்ள செய்தியை படித்தால் சர்தார் பட்டேலின் நேர்மை என்ன என்பதும் தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும் தெரியவரும்.

” என்னுடைய மகனின் தொழிற்சாலையை குறித்தோ, அவருடைய நடத்தை குறித்தோ எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. அரசாங்கத்திலிருந்து என் மகன் மீதும் அவருடைய தொழிற்சாலை மீதும் எந்தவித நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்கும் நீங்கள் பின்வாங்க வேண்டாம். நீங்கள் எந்த நடவடிக்கை எடுத்துக்கொண்டாலும் நான் அதில் தலையிட மாட்டேன்” என்று அந்த கடிதத்தில் உள்ளது.

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..
patel nizam
patel nizam

இப்போதைய அரசியல் வாதிகளுக்கு இது ஒரு பிரச்சாரத்திற்காக செய்த சடங்காக தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் நாம் இந்நாட்களில் பார்ப்பது இது போன்ற சடங்குகளை மட்டுமே.

ஆனால் அவர் நேர்மையையும் அவருடைய திடசங்கல்பத்தையும் சந்தேகப்படுபவர்களுக்காக ஒரு விஷயம் என்னவென்றால்… சர்தார் பட்டேல் அநீதியை கொஞ்சமும் ஏற்கக்கூடியவர் அல்ல. அவருடைய ஒரே மகனின் முகத்தை கூட பார்ப்பதற்கு அவர் நிராகரித்தார். தன்னுடைய இறுதி நாட்களில் தன் நண்பரின் வீட்டிலேயே தங்கி வசித்து அங்கேயே மரணமடைந்தார். இந்த நாட்களில் இது போன்ற அரசியல் தலைவர்களை நம்மால் யூகிக்க முடியுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories