இன்று டிச.15; சர்தார் வல்லபபாய் பட்டேல் நினைவு நாள்!

patelstatue
patelstatue

தற்காலத்தில் தேசம், மாநிலம் என்பது தம் சொந்த சொத்தாக, தனியார் கம்பெனிகளாக செய்வதற்கும், தமக்குப் பிறகு தம் வாரிசுகளும் உறவினர்களும் அதனை ஆளுவதற்கும் மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் தலைவர்களே நமக்கு எங்கும் தென்படுகிறார்கள். அவர்களும், அவர்களை நம்புபவர்களும் சர்தார் வல்லபாய் பட்டேல் குறித்த இந்த சம்பவத்தை நம்புவார்களோ நம்பமாட்டார்களோ தெரியாது. ஆனால் அரசியல் தலைவர்களில் கூட விழுமியங்கள் இருந்த நாட்களில் நடைபெற்ற சம்பவம் ஆதலால் இது பலருக்கும் கண் விழிப்பாக இருக்கும்.

சர்தார் வல்லப பாய் பட்டேலுக்கு ஒரு பெண். மணி பென் பட்டேல். ஒரே ஒரு மகன் தஹ்யாபாய் பட்டேல்.

patel Gandhi nehrujpg
patel Gandhi nehrujpg

சர்தார் பட்டேல் பாரத துணை பிரதமராக இருந்த நாட்களில் அவருடைய புதல்வன் பம்பாயில் புகழ் பெற்ற தொழில் அதிபராக விளங்கினார். தந்தை எத்தகைய நேர்மையானவரோ அவருடைய மகன் அவ்வளவு நேர்மையற்றவராக இருந்தார். தந்தைக்குத் தெரியாமல் அவருடைய பதவியை முன்னிட்டுக் கொண்டு பல அக்கிரமங்களை செய்தார். பட்டேலுக்கு அந்த விஷயம் தெரிய வந்தது. உடனே அப்போதைய தொழிலாளர் துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் உள்ள செய்தியை படித்தால் சர்தார் பட்டேலின் நேர்மை என்ன என்பதும் தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும் தெரியவரும்.

” என்னுடைய மகனின் தொழிற்சாலையை குறித்தோ, அவருடைய நடத்தை குறித்தோ எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. அரசாங்கத்திலிருந்து என் மகன் மீதும் அவருடைய தொழிற்சாலை மீதும் எந்தவித நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்கும் நீங்கள் பின்வாங்க வேண்டாம். நீங்கள் எந்த நடவடிக்கை எடுத்துக்கொண்டாலும் நான் அதில் தலையிட மாட்டேன்” என்று அந்த கடிதத்தில் உள்ளது.

patel nizam
patel nizam

இப்போதைய அரசியல் வாதிகளுக்கு இது ஒரு பிரச்சாரத்திற்காக செய்த சடங்காக தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் நாம் இந்நாட்களில் பார்ப்பது இது போன்ற சடங்குகளை மட்டுமே.

ஆனால் அவர் நேர்மையையும் அவருடைய திடசங்கல்பத்தையும் சந்தேகப்படுபவர்களுக்காக ஒரு விஷயம் என்னவென்றால்… சர்தார் பட்டேல் அநீதியை கொஞ்சமும் ஏற்கக்கூடியவர் அல்ல. அவருடைய ஒரே மகனின் முகத்தை கூட பார்ப்பதற்கு அவர் நிராகரித்தார். தன்னுடைய இறுதி நாட்களில் தன் நண்பரின் வீட்டிலேயே தங்கி வசித்து அங்கேயே மரணமடைந்தார். இந்த நாட்களில் இது போன்ற அரசியல் தலைவர்களை நம்மால் யூகிக்க முடியுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories