நிலங்களுக்குச் செல்ல பாதை வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

route-for-farming-land
route-for-farming-land
  • விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை அமைக்கப்படுமா?
  • வடிவேல்கரை விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள, விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என, புறநகர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, வடிவேல்கரை ஊராட்சியில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, 250 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன.

இவற்றில், வடிவேல்கரை மற்றும் விளாச்சேரி கிராமங்களை சேர்ந்த, 100 விவசாயிகள் நெல், வாழை விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலத்தின்,கிழக்கு மற்றும் வடக்கில் நிலையூர் கால்வயும், மேற்கே, ஸ்ரீநகர் – கன்னியாகுமரி, தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலமும், தெற்கில், மதுரை – தேனி அகல ரயில் பாதையும் செல்கிறது. இதனால், சம்பந்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு செல்ல பாதையின்றி உள்ளது.

இதுகுறித்து, விவசாயி, எம்.முத்து விருமாண்டி, 65 கூறியதாவது :

பாதை இல்லாததால், பண்ணை உபகரணங்கள், விவசாய இடுபொருட்கள், விவசாயம் சார்ந்த வாகனங்கள், விவசாய நிலங்களுக்கு செல்ல இயலவில்லை.

தேசிய நெடுஞ்சாலையின் பாலம் அமைக்கப்பட்டது முதல், இந்த விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை வசதி இல்லாததால், ஆண்டுதோறும் விவசாயம் செய்வது கேள்விக்குறியாகி, பல்வேறு பிரச்னைகளை, நாங்கள் சந்தித்து வருகிறோம்.

பிரதான தொழிலான விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால், என்னை போன்ற பல விவசாயிகளின் வாழ்வதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது

எனவே, தேசிய நெடுஞ்சாலையின் பாலத்தின் அருகில் அணுகுசாலையோ அல்லது நிலையூர் கால்வாயின் கிழக்கு புறத்தில் இருந்து, விவசாய நிலங்களுக்கு செல்ல பாலமோ அமைத்து தர வேண்டும்.

இதில், அணுகுசாலை அமைக்க, தேவையான இடம், அத்துறை வசம், ஏற்கனவே உள்ளது. பாலம் அமைக்க தேவையான இடத்தை, அரசுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் கோரிக்கையை அரசு, பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories