நிலங்களுக்குச் செல்ல பாதை வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

route-for-farming-land
route-for-farming-land
  • விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை அமைக்கப்படுமா?
  • வடிவேல்கரை விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள, விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என, புறநகர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, வடிவேல்கரை ஊராட்சியில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, 250 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன.

இவற்றில், வடிவேல்கரை மற்றும் விளாச்சேரி கிராமங்களை சேர்ந்த, 100 விவசாயிகள் நெல், வாழை விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலத்தின்,கிழக்கு மற்றும் வடக்கில் நிலையூர் கால்வயும், மேற்கே, ஸ்ரீநகர் – கன்னியாகுமரி, தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலமும், தெற்கில், மதுரை – தேனி அகல ரயில் பாதையும் செல்கிறது. இதனால், சம்பந்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு செல்ல பாதையின்றி உள்ளது.

இதுகுறித்து, விவசாயி, எம்.முத்து விருமாண்டி, 65 கூறியதாவது :

பாதை இல்லாததால், பண்ணை உபகரணங்கள், விவசாய இடுபொருட்கள், விவசாயம் சார்ந்த வாகனங்கள், விவசாய நிலங்களுக்கு செல்ல இயலவில்லை.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

தேசிய நெடுஞ்சாலையின் பாலம் அமைக்கப்பட்டது முதல், இந்த விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை வசதி இல்லாததால், ஆண்டுதோறும் விவசாயம் செய்வது கேள்விக்குறியாகி, பல்வேறு பிரச்னைகளை, நாங்கள் சந்தித்து வருகிறோம்.

பிரதான தொழிலான விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால், என்னை போன்ற பல விவசாயிகளின் வாழ்வதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது

எனவே, தேசிய நெடுஞ்சாலையின் பாலத்தின் அருகில் அணுகுசாலையோ அல்லது நிலையூர் கால்வாயின் கிழக்கு புறத்தில் இருந்து, விவசாய நிலங்களுக்கு செல்ல பாலமோ அமைத்து தர வேண்டும்.

இதில், அணுகுசாலை அமைக்க, தேவையான இடம், அத்துறை வசம், ஏற்கனவே உள்ளது. பாலம் அமைக்க தேவையான இடத்தை, அரசுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் கோரிக்கையை அரசு, பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories