தீப உத்ஸவம் நிறைவு; திருவண்ணாமலையில் புனித நீர் தெளிப்பு!

Published:

thiruvannamalai-holy-water1
thiruvannamalai-holy-water1

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மலை மீது புனித நீர் தெளிக்கப் பட்டது.

thiruvannamalai-holy-water2
thiruvannamalai-holy-water2

அருணாசல மலை மீது தெளிப்பதற்காக, புனித நீர்க் குடங்களுக்கு இன்று கோயில் இரண்டாம் பிராகாரத்தில் சிறப்பு ஆராதனைகள் செய்யப் பட்டன. பின்னர் சுவாமி எழுந்தருளச் செய்யும் பணியாளர்களால் புனித நீர் கலசலத்தில் மலைமீது எடுத்துச் செல்லப்பட்டது.

thiruvannamalai-holy-water3
thiruvannamalai-holy-water3

மலை உச்சியின் சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. திருக்கோயில் பிச்சகர் விஜயகுமார் இதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்திருந்தார்.

  • எஸ்.ஆர்.வி.பாலாஜி, திருவண்ணாமலை

Related articles

Recent articles

spot_img