விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற அரசு; திரையரங்குகளில் 100 சத இருக்கைகளுக்கு அனுமதி!

simbu
simbu

நடிகர்கள் விஜய், சிம்பு ஆகியோரின் கோரிக்கையை ஏற்று, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

கொரானோ கால ஊரடங்கு காரணமாக சினிமா திரையரங்குகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டன. பின்னர், தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர், டிசம்பரில் 75 சதவீதம், ஜனவரியில் 100 சதவீதம் என மாற்ற வேண்டும் என திரையரங்கு அதிபர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் 50 சதவீத நிலையிலிருந்து அதை மாற்றும் உத்தரவை அரசு வெளியிடவில்லை.

இந்நிலையில், நடிகர் விஜய், தனது படமான மாஸ்டர் வெளியாகும் நிலையில், தமிழக முதல்வரைச் சந்தித்து 100 சதவீத இருக்கைக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதேபோல், தனது படமான ஈஸ்வரன் வெளியாகும் நிலையில், நடிகர் சிம்புவும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து கடிதம் எழுதினார்.

சிம்பு எழுதிய கடிதம்…

Simbu-letter1
Simbu-letter1
Simbu-letter-2
Simbu-letter-2

ஜன.13ஆம் தேதி விஜய் நடித்த மாஸ்டர் படமும், ஜன. 14ஆம் தேதி சிம்புவின் ஈஸ்வரன் படமும் வெளியாகிறது. எனவே, அதற்குள் மேற்படி கோரிக்கைக்கு இணங்கி, அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள், சிம்பு, விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

1 COMMENT

  1. திரையரங்குகளில் நூறுசதவீதப் பார்வையாளர்களை அனுமதிக்க அரசு இவ்வளவு அவசரப் பட்டிருக்கக் கூடாது. விளைவுகள் தாங்க முடியாதானால் சிம்புவும் விஜய்யுமா வந்து காப்பாற்றப் போகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories