December 5, 2025, 7:10 PM
26.7 C
Chennai

விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற அரசு; திரையரங்குகளில் 100 சத இருக்கைகளுக்கு அனுமதி!

simbu
simbu

நடிகர்கள் விஜய், சிம்பு ஆகியோரின் கோரிக்கையை ஏற்று, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

கொரானோ கால ஊரடங்கு காரணமாக சினிமா திரையரங்குகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டன. பின்னர், தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர், டிசம்பரில் 75 சதவீதம், ஜனவரியில் 100 சதவீதம் என மாற்ற வேண்டும் என திரையரங்கு அதிபர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் 50 சதவீத நிலையிலிருந்து அதை மாற்றும் உத்தரவை அரசு வெளியிடவில்லை.

இந்நிலையில், நடிகர் விஜய், தனது படமான மாஸ்டர் வெளியாகும் நிலையில், தமிழக முதல்வரைச் சந்தித்து 100 சதவீத இருக்கைக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதேபோல், தனது படமான ஈஸ்வரன் வெளியாகும் நிலையில், நடிகர் சிம்புவும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து கடிதம் எழுதினார்.

சிம்பு எழுதிய கடிதம்…

Simbu-letter1
Simbu-letter1
Simbu-letter-2
Simbu-letter-2

ஜன.13ஆம் தேதி விஜய் நடித்த மாஸ்டர் படமும், ஜன. 14ஆம் தேதி சிம்புவின் ஈஸ்வரன் படமும் வெளியாகிறது. எனவே, அதற்குள் மேற்படி கோரிக்கைக்கு இணங்கி, அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள், சிம்பு, விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

1 COMMENT

  1. திரையரங்குகளில் நூறுசதவீதப் பார்வையாளர்களை அனுமதிக்க அரசு இவ்வளவு அவசரப் பட்டிருக்கக் கூடாது. விளைவுகள் தாங்க முடியாதானால் சிம்புவும் விஜய்யுமா வந்து காப்பாற்றப் போகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories