ஈஸ்வர அனுக்கிரகம் பெற செய்ய வேண்டியது: ஆச்சார்யாள் அருளமுதம்!

Bharathi-thirthar
Bharathi-thirthar

உலகத்தில் உள்ள மனிதர்களின் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அவர்கள் செய்யும் புண்ணிய பாவ கர்மங்களின் காரணமாகின்றன. மனிதன் ஒரு கணம்கூட கர்மாக்களை செய்யாமல் இருப்பதில்லை. அவன் தன்னுடைய பூர்வஜென்ம வாசனையால் விகித கர்மாக்களையும் நிஷித்த கர்மாக்களையோ தெரிந்தோ, தெரியாமலோ வாக்காலும் மனத்தாலும் உடலாலும் செய்து கொண்டுவருகிறான். விஜித கர்மாக்களின் பலனாக சுகத்தையும் துக்கத்தையும் மனதாலும் உடலாலும் அனுபவிக்கிறான். நிஷித்த கர்மாக்களின் பலனாக துக்கத்தையும் வாக்காலும், மனத்தாலும் அனுபவிக்கிறான்‌ இந்த சக்கரத்தை புரிந்துகொள்ளாமல் நண்பர்களால் சுகமும், பகைவர்களால் துக்கமும் ஏற்படுகிறது என்று மனிதர்கள் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். இதைத்தான் சங்கர பகவத்பாதாள் “ஹேது: கர்மைவ லோகே ஸுகதிதரயோரேவமஜ்ஞோ(அ)விதித்வா மித்ரம் வா சத்ருரித்தம் வ்யவஹரதி ம்ருஷா…” என்று கூறியிருக்கிறார். ஆகையால் அவன் அவன் செய்கின்ற கர்மாக்கள் தான் அவன் அவனவன் செய்கின்ற கர்மாக்கள் தான் அவனவனின் சுகதுக்கத்திற்குக் காரணமாகிறது. கர்மாக்கள் தான் பந்தத்திற்கு காரணமாகிறது. ஆனால் அந்த கர்மாக்களை ஈஸ்வரார்பண புத்தியுடன் செய்தால் செய்தால் அது பந்தத்திற்குக் காரணமாகாது. அதைத்தான் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா
யஜ்ஞார்த்தாத்கர்மணோ(அ)ந்யத்ர லோகோ(அ)யம் கர்ம பந்தன: ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க ஸமாசர. என்று உபதேசித்திருக்கிறார் .இந்த இடத்தில் யஜ்ஞ என்பதற்கு ஈஸ்வர: என்று அர்த்தம் அதாவது எவனொருவன் அகங்காரம் இல்லாமல் ஈசுவர அர்ப்பண புத்தியுடன் விஹித கர்மாக்களைச் செய்து கொண்டு வருகிறானோ அவனுக்கு பரமாத்மாவின் கிருபையால் சித்த சுத்தி ஏற்பட்டு பரமஸ்ரேயஸ் உண்டாகிறது என்பதை இந்த ஸ்லோகத்தின் கருத்து. ஆகையால் ஸ்ரேயஸை விரும்புவர்கள் நித்திய கர்மாக்களை ஈஸ்வரார்பண புத்தியுடன் செய்து வந்து எல்லாவித நன்மைகளையும் அடையட்டும் என்று ஆசீர்வதித்திக்கிறோம். என்று மகாசன்னிதானம் ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அருளுரை வழங்குகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Topics

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Entertainment News

Popular Categories