ஆந்திர கோயில்கள் மீதான தாக்குதல்கள்: சின்ன ஜீயர் ஸ்வாமி பரபரப்பு விமர்சனம்!

chinna-jeeyar-and-jagan
chinna-jeeyar-and-jagan
  • ராம தீர்த்தத்தில் நடந்த கோவில் சிலை தாக்குதல் குறித்து சின்ன ஜீயர் சுவாமி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
  • மதம் தொடர்பான விஷயங்களில் அரசியல் செய்வது யாருக்கும் தகுந்ததல்ல என்று சின்ன ஜீயர் சுவாமி குறிப்பிட்டார்.
  • சர்ச், மசூதி மீது தாக்குதல் நடந்தால் கூட இதுபோன்றே எதிர்வினை ஆற்றுவேன் என்றும் கூறினார்.

ஆந்திரப் பிரதேசத்தில் ஹிந்து கோவில்களின் மீது வரிசையாக நடந்து வரும் தாக்குதல்கள் குறித்து பிரபல ஆன்மிக குருவான சின்ன ஜீயர் சுவாமி பரபரப்பு விமர்சனம் செய்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள இந்து கோவில்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு குறைந்துவிட்டது என்று அவர் கூறினார். அந்தர்வேதி க்ஷேத்திரத்தில் உள்ள ரதம் பற்றி எரிந்தது, ராம தீர்த்தம் கோதண்டராம ஸ்வாமி விக்ரஹத்தின் தலைப்பகுதி சேதப் படுத்தப் பட்டது போன்றவை இதற்கு உதாரணங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

chinna-jeeyar-swami-andhra
chinna-jeeyar-swami-andhra

குண்டூர் மாவட்டத்தில் சீதா நகரத்தில் அவர் இது குறித்து உரையாற்றினார். மாநிலத்தில் இதுவரை 50-க்கும் மேலான ஆலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் நேற்று சிங்கரயகொண்டாவில் மற்றுமொரு ஆலயத்தின் விக்ரகங்களை சேதப்படுத்தி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது என்றார் அவர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

ஆலயங்களில் உள்ள விக்ரகங்களை சேதப்படுத்துவது குறித்து சுவாமிஜி ஒரு நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்தார். தனுர் மாத தீட்சை முடிந்த உடனே இந்த ஜன.17ஆம் தேதியிலிருந்து தாக்குதல்களுக்கு உள்ளான ஆலயங்களைப் பார்வையிடப் போவதாக சின்ன ஜீயர் சுவாமி அறிவித்தார்.

தாக்குதலுக்கு ஆளான ஆலயங்களை பரிசீலித்து அதன் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், பக்தர்களுடன் பேசப் போவதாகக் கூறினார். ஆலயங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அறநிலையத் துறைக்கு இருக்கிறது என்றும் ஆலயங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஏற்பாடு செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கிறது என்றும் சின்ன ஜீயர் சுவாமி குறிப்பிட்டார்.

மாநிலத்தில் நடந்து வரும் மோசமான சம்பவங்கள் குறித்து அரசாங்கம் மக்களுக்கு தைரியம் கூற வேண்டிய தேவை இருக்கிறது என்று ஜீயர் சுவாமி தனது கருத்தைத் தெரிவித்தார். ஆலயங்களுக்கான பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

chinna-jeeyar-swami
chinna-jeeyar-swami

ஆலயங்களில் நடக்கும் சம்பவங்கள் குறித்து அரசாங்கம் ஒரு கமிட்டி ஏற்பாடு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி விசாரணை நடக்கும் படியாக கமிட்டி இருக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ஆலயங்கள் மீது நடந்து வரும் தாக்குதல்கள் குறித்து வெறும் மடாதிபதிகள் மட்டுமே பேசுவது அல்ல… பொது மக்கள் ஒவ்வொருவரும் இது குறித்துப் பேச முன்வர வேண்டும் என்றார் அவர்.

மேலும், மதம் தொடர்பான விஷயங்களில் அரசியல் செய்வது தவறு என்றும் அரசியல், ஆன்மீகம் இரண்டும் வெவ்வேறானவை என்றும் சின்ன ஜீயர் சுவாமி தெளிவுபடுத்தினார். சர்ச்சுகள், மசூதிகள் மீது தாக்குதல் நடந்தாலும் தாம் இவ்விதமாகவே எதிர்வினை ஆற்றுவோம் என்றும் கூறினார்.

உயர் நீதிமன்ற உத்தரவுப் படி சென்ற அரசாங்கத்தில் நடந்த சம்பவங்கள் குறித்த தமது பயணங்களை ஒத்தி வைத்ததாகவும்… 17ஆம் தேதியிலிருந்து தாம் யாத்திரை மேற்கொள்ளப் போவதாகவும் சின்ன ஜீயர் சுவாமி கூறினார்.

குறிப்பாக, தாம் அரசாங்கத்திற்கு அனுகூலமான நபரும் அல்ல; அதற்காக அனுகூலமில்லாத நபரும் அல்ல என்றும் சின்ன ஜீயர் சுவாமி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories