February 11, 2025, 11:59 AM
27.5 C
Chennai

ஆந்திர கோயில்கள் மீதான தாக்குதல்கள்: சின்ன ஜீயர் ஸ்வாமி பரபரப்பு விமர்சனம்!

chinna-jeeyar-and-jagan
chinna-jeeyar-and-jagan
  • ராம தீர்த்தத்தில் நடந்த கோவில் சிலை தாக்குதல் குறித்து சின்ன ஜீயர் சுவாமி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
  • மதம் தொடர்பான விஷயங்களில் அரசியல் செய்வது யாருக்கும் தகுந்ததல்ல என்று சின்ன ஜீயர் சுவாமி குறிப்பிட்டார்.
  • சர்ச், மசூதி மீது தாக்குதல் நடந்தால் கூட இதுபோன்றே எதிர்வினை ஆற்றுவேன் என்றும் கூறினார்.

ஆந்திரப் பிரதேசத்தில் ஹிந்து கோவில்களின் மீது வரிசையாக நடந்து வரும் தாக்குதல்கள் குறித்து பிரபல ஆன்மிக குருவான சின்ன ஜீயர் சுவாமி பரபரப்பு விமர்சனம் செய்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள இந்து கோவில்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு குறைந்துவிட்டது என்று அவர் கூறினார். அந்தர்வேதி க்ஷேத்திரத்தில் உள்ள ரதம் பற்றி எரிந்தது, ராம தீர்த்தம் கோதண்டராம ஸ்வாமி விக்ரஹத்தின் தலைப்பகுதி சேதப் படுத்தப் பட்டது போன்றவை இதற்கு உதாரணங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

chinna-jeeyar-swami-andhra
chinna-jeeyar-swami-andhra

குண்டூர் மாவட்டத்தில் சீதா நகரத்தில் அவர் இது குறித்து உரையாற்றினார். மாநிலத்தில் இதுவரை 50-க்கும் மேலான ஆலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் நேற்று சிங்கரயகொண்டாவில் மற்றுமொரு ஆலயத்தின் விக்ரகங்களை சேதப்படுத்தி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது என்றார் அவர்.

ஆலயங்களில் உள்ள விக்ரகங்களை சேதப்படுத்துவது குறித்து சுவாமிஜி ஒரு நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்தார். தனுர் மாத தீட்சை முடிந்த உடனே இந்த ஜன.17ஆம் தேதியிலிருந்து தாக்குதல்களுக்கு உள்ளான ஆலயங்களைப் பார்வையிடப் போவதாக சின்ன ஜீயர் சுவாமி அறிவித்தார்.

தாக்குதலுக்கு ஆளான ஆலயங்களை பரிசீலித்து அதன் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், பக்தர்களுடன் பேசப் போவதாகக் கூறினார். ஆலயங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அறநிலையத் துறைக்கு இருக்கிறது என்றும் ஆலயங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஏற்பாடு செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கிறது என்றும் சின்ன ஜீயர் சுவாமி குறிப்பிட்டார்.

மாநிலத்தில் நடந்து வரும் மோசமான சம்பவங்கள் குறித்து அரசாங்கம் மக்களுக்கு தைரியம் கூற வேண்டிய தேவை இருக்கிறது என்று ஜீயர் சுவாமி தனது கருத்தைத் தெரிவித்தார். ஆலயங்களுக்கான பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

chinna-jeeyar-swami
chinna-jeeyar-swami

ஆலயங்களில் நடக்கும் சம்பவங்கள் குறித்து அரசாங்கம் ஒரு கமிட்டி ஏற்பாடு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி விசாரணை நடக்கும் படியாக கமிட்டி இருக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

ஆலயங்கள் மீது நடந்து வரும் தாக்குதல்கள் குறித்து வெறும் மடாதிபதிகள் மட்டுமே பேசுவது அல்ல… பொது மக்கள் ஒவ்வொருவரும் இது குறித்துப் பேச முன்வர வேண்டும் என்றார் அவர்.

மேலும், மதம் தொடர்பான விஷயங்களில் அரசியல் செய்வது தவறு என்றும் அரசியல், ஆன்மீகம் இரண்டும் வெவ்வேறானவை என்றும் சின்ன ஜீயர் சுவாமி தெளிவுபடுத்தினார். சர்ச்சுகள், மசூதிகள் மீது தாக்குதல் நடந்தாலும் தாம் இவ்விதமாகவே எதிர்வினை ஆற்றுவோம் என்றும் கூறினார்.

உயர் நீதிமன்ற உத்தரவுப் படி சென்ற அரசாங்கத்தில் நடந்த சம்பவங்கள் குறித்த தமது பயணங்களை ஒத்தி வைத்ததாகவும்… 17ஆம் தேதியிலிருந்து தாம் யாத்திரை மேற்கொள்ளப் போவதாகவும் சின்ன ஜீயர் சுவாமி கூறினார்.

குறிப்பாக, தாம் அரசாங்கத்திற்கு அனுகூலமான நபரும் அல்ல; அதற்காக அனுகூலமில்லாத நபரும் அல்ல என்றும் சின்ன ஜீயர் சுவாமி தெரிவித்தார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories