December 5, 2025, 3:26 PM
27.9 C
Chennai

பணம் பண்ண மக்கள் உயிர் பணயமா? விஜய், சிம்புவுக்கு டாக்டரின் உருக்க கடிதம்!

master2
master2

நடிகர்கள் விஜய் மற்றும் சிம்புவுக்கு அரவிந்து சீனிவாஸ் என்ற மருத்துவர் எழுதிய உருக்கமான கடிதம் முகநூலில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு நடிகர் விஜய் மற்றும் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் திரைக்கு வர இருப்பதால், விஜய் மற்றும் சிம்பு ஆகிய நடிகர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

simbu2
simbu2

இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கேட்ட நடிகர்கள் விஜய், சிம்பு மற்றும் தமிழக அரசுக்கு அரவிந்து சீனிவஸ் என்ற மருத்துவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

டியர் விஜய் சார்.. சிலம்பரசன் சார் மற்றும் மாண்புமிகு தமிழக அரசே.. நான் சோர்வடைந்து போய்விட்டேன். நாங்கள் அனைவரும் சோர்வில் உள்ளோம். காவல்துறையினரும் சோர்வடைந்து போய்விட்டனர். துப்புறவு பணியாளர்களும் சோர்வில் உள்ளனர்.

இதுவரை பார்த்திராத ஒரு பெரிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய இந்த காலகட்டத்தில், அதிக அளவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முயற்சிகளை செய்துள்ளோம். எங்களது பணியை நான் புகழவில்லை. எங்களுக்கு முன்பாக கேமராக்கள் இல்லை. சண்டை காட்சிகள் இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் கொஞ்சம் மூச்சுக் காற்றை இழுத்து விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு தகுதியானவர்கள்தான் நாங்கள்.

dr-letter-1
dr-letter-1

சிலரது சுயநலம் மற்றும் பேராசைக்கு நாங்கள் இரையாக விரும்பவில்லை. பெருந்தொற்று நோய் இன்னும் ஓயவில்லை. மக்கள் இன்னும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் 100% ரசிகர்களை தியேட்டர்களுக்கு அனுமதிப்பது ஒரு தற்கொலை முயற்சி. கொள்கை வகுப்பாளர்களோ, அல்லது நீங்கள் ஹீரோக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களோ, கூட்டத்தோடு கூட்டமாக சென்று திரைப்படம் பார்க்கப் போவது கிடையாது.

thetter

உயிரை பணயம் வைத்து பண்டமாற்று முறையில் இங்கு வணிகம் செய்யப்படுகிறது. அறிவியல் பூர்வமாக இது மிகவும் ஆபத்தான முடிவு என்பதை விளக்க நினைத்தேன். ஆனால் எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.. அதை நான் சொல்லிதான் என்ன பலன்? ‘இப்படிக்கு சோர்வடைந்து போயுள்ள ஒரு ஏழை மருத்துவர்’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories