பெண்களை வைத்து போலி கால் சென்டர்! களிமண் அடைத்து மோசடி!

fake-cell-phone-1
fake

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பிச்சனூர் பேட்டையில் உள்ள சுப்பையா தெருவில், வீட்டின் மாடியில் இளம் பெண்கள் அதிகமாக வந்து செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குடியாத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை செய்துள்ளனர்.

இதன்போது அங்கு போலியான கால் சென்டர் நடந்து வருவதும், 15-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களை தொலைபேசியில் அழைத்து, குறைந்த விலையிலான அலைபேசிகள், பவர் பேங்க், சார்ஜ் வழங்குவதாக கூறி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

ஆன்லைனில் பணம் கட்டச் சொல்லி போன் பேசும் இவர்களின் பேச்சில் மயங்கும் நபர்கள் பணம் காட்டினால், பவர் பேங்க் போன்ற வடிவில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அடைத்து வைத்தும், சில பெட்டிகளில் களிமண் வைத்து அனுப்பியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர், பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை அழைத்து பெற்றோரை வரச்சொல்லி அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், இந்த போலியான கால் சென்டரை நடத்தி வந்த நபரும் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே தமிழகத்தில் இதுபோன்று பல போலியான கால் சென்டர்கள் காவல் துறையினரால் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு பணியாற்றும் பெண்கள் வறுமையால் வாடிவரும் நிலையில், அவர்களை மூளைச்சலவை செய்து வேலைக்கு பயன்படுத்துவதாகவும் பல பகீர் தகவல் வெளியானது.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

இதுபோன்று பெண்களை பணியில் சேர்க்கிறோம் என்ற போர்வையில் செயல்படும் நிறுவனங்களை கண்டறிந்து, அதனை நடத்தி வந்த நபர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், பெண்கள் / ஆண்கள் என யார் பணியாற்றும் இடமாக இருந்தாலும் அங்கு நடப்பது என்ன என்பதை முடிந்தளவு உறுதி செய்து பணியாற்றுமாறும், வரும் நாட்களில் தேவையில்லாத சிக்கலில் சிக்கி மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டாம் என்றும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories