December 5, 2025, 4:02 PM
27.9 C
Chennai

ஓய்வூதிய உயர்வு: முதல்வரை சந்தித்து கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை அறங்காவலர்கள் நன்றி!

vhp-village-poojari-peravai-met-cm
vhp-village-poojari-peravai-met-cm

நீண்ட நாள் கோரிக்கையான கிராம கோயில் பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு, வருமான உச்சவரம்பு உயர்வு அளித்து உத்தரவிட்ட முதல்வருக்கு தமிழ்நாடு கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில், அறங்காவலர்கள் நேரில் நன்றி தெரிவித்தனர்.

6 லட்சம் குடும்ப உறுப்பினர்களை கொண்ட கிராம கோயில் பூஜாரிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ. ஆயிரம் வழங்கப்பட்டு வருவதை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசின் சலுகைகள் மற்றும் ஓய்வூதிய பலன்கள் பெற, அவர்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 24 என்பதை ரூ. 72 ஆயிரமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தமிழ்நாடு கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவித்த முதல்வர் பழனிசாமியை அவரது முகாம் அலுவலகத்தில் பூஜாரிகள் பேரவையின் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம், அறங்காவலர்கள் ஆர்.ஆர்.கோபால்ஜி, கிரிஜா சேஷாத்ரி, ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து, பூஜாரிகள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

அப்போது, தமிழகத்தில் முறையாக பயிற்சி பெற்று கோயில் பூஜாரிகளாக பணியாற்றுபவர்களுக்கு மாதாம் தோறும் ரூ. 3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் வலியுறுத்தினோம். அதற்கு ஆவன செய்வதாகக் கூறியதுடன், 2016ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நேரத்தில் அரக்கோணத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். அவரது அறிவிப்பு நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதை நிறைவேற்றித் தர வேண்டும்.

அத்துடன் தமிழகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான பூக்கட்டும் பேரவை உறுப்பினர்களின் நீண்ட கால கோரிக்கையான அவர்களுக்கு நலவாரியம் அமைத்து சலுகைகள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று நிர்வாக அறங்காவலர் மற்றும் அறங்காவலர்கள் வலியுறுத்தினர்.

கோரிக்கைகளை பொறுமையாக கேட்டுக் கொண்ட முதல்வர் பழனிசாமி, தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்வதாக உறுதி அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories