February 6, 2025, 5:42 PM
31 C
Chennai

ஓய்வூதிய உயர்வு: முதல்வரை சந்தித்து கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை அறங்காவலர்கள் நன்றி!

vhp-village-poojari-peravai-met-cm
vhp-village-poojari-peravai-met-cm

நீண்ட நாள் கோரிக்கையான கிராம கோயில் பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு, வருமான உச்சவரம்பு உயர்வு அளித்து உத்தரவிட்ட முதல்வருக்கு தமிழ்நாடு கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில், அறங்காவலர்கள் நேரில் நன்றி தெரிவித்தனர்.

6 லட்சம் குடும்ப உறுப்பினர்களை கொண்ட கிராம கோயில் பூஜாரிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ. ஆயிரம் வழங்கப்பட்டு வருவதை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசின் சலுகைகள் மற்றும் ஓய்வூதிய பலன்கள் பெற, அவர்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 24 என்பதை ரூ. 72 ஆயிரமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தமிழ்நாடு கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவித்த முதல்வர் பழனிசாமியை அவரது முகாம் அலுவலகத்தில் பூஜாரிகள் பேரவையின் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம், அறங்காவலர்கள் ஆர்.ஆர்.கோபால்ஜி, கிரிஜா சேஷாத்ரி, ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து, பூஜாரிகள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

அப்போது, தமிழகத்தில் முறையாக பயிற்சி பெற்று கோயில் பூஜாரிகளாக பணியாற்றுபவர்களுக்கு மாதாம் தோறும் ரூ. 3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் வலியுறுத்தினோம். அதற்கு ஆவன செய்வதாகக் கூறியதுடன், 2016ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நேரத்தில் அரக்கோணத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். அவரது அறிவிப்பு நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதை நிறைவேற்றித் தர வேண்டும்.

அத்துடன் தமிழகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான பூக்கட்டும் பேரவை உறுப்பினர்களின் நீண்ட கால கோரிக்கையான அவர்களுக்கு நலவாரியம் அமைத்து சலுகைகள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று நிர்வாக அறங்காவலர் மற்றும் அறங்காவலர்கள் வலியுறுத்தினர்.

கோரிக்கைகளை பொறுமையாக கேட்டுக் கொண்ட முதல்வர் பழனிசாமி, தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்வதாக உறுதி அளித்தார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது.

Topics

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது.

கெடுபிடி தடைகளைத் தகர்த்து, அதிர்ந்த திருப்பரங்குன்றம்; ஹெச்.ராஜா வீரமுழக்கம்!

நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு திருப்பரங்குன்றம் வந்த ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் ஆர்பாட்டம் ஏன் என்பது பற்றி உரை நிகழ்த்தினர்.

பஞ்சாங்கம் பிப்.04- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

உசிலம்பட்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

பாலமேடு அருகே 66 மேட்டுப்பட்டி உசிலம்பட்டியில்அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷே விழா நடைபெற்றது. 

Entertainment News

Popular Categories