February 11, 2025, 11:54 AM
27.5 C
Chennai

தைப்பூசமும் ஐஸ்கிரீமும்!

IMG-20210129-WA0004
IMG-20210129-WA0004

தைப்பூசமும் ஐஸ்கிரீமும்
– கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் –

மயிலாப்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தைப்பூசத் திருவிழாக் காட்சியில் எடுக்கப்பட்டப் புகைப்படத்தைத்தான் மேலே பார்க்கிறீர்கள். முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக தைப்பூச நாள் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந் நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். தை மாதத்தில் பூச நட்சத்திரத்தோடு வரும் பௌர்ணமி நாளை விசேஷ நாளாக இலங்கையில் உள்ளவர்களும் அனுசரிக்கிறார்கள். வயலில் நெற்கதிர் அறுத்து இன்று சிறப்பு வழிபாடு(யாழ்ப்பாணத் தமிழர்கள்)செய்வார்கள்.

மயிலாப்பூர் தெப்போற்சவக் கூட்டம் எல்லாம் வீடு திரும்பிய பின் மைலாப்பூர் தெப்பக்குளத்தை முருகனை த்யானித்துக் கொண்டு முகக் கவசம் அணிந்தபடி சுற்றி வந்தேன். இரண்டு குழந்தைகள் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டு இருந்ததைப் பார்த்தேன்……..

தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது…..

“ஐஸ்க்ரீமைக் கப்பில் சாப்பிட்ட பின்பு அந்த கப்பை தூர எறிந்துவிடுவார்கள்! இந்தக் கப்புகளைப் பொறுக்கி எடுத்து அப்புறப்படுத்த கலிபோர்னியா டவுன்ஷிப்பிற்கு நிறைய செலவு பிடித்தது! ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு டவுன்ஷிப் ஏற்பாடு செய்தது.

IMG-20210129-WA0005
IMG-20210129-WA0005

ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு யோசனைகளைத் தெரிவித்தார்கள். ஒருவர் சொன்னார் கப்பையே சாப்பிடுகிற மாதிரி தயார் செய்துவிட்டால்…. குப்பையை அகற்றும் செலவு கொஞ்சம் குறையும் என்றார். அவருடைய யோசனையின் படி உருவானதுதான் கோன் (வேஃப்பர்) ஐஸ்கிரீம்”.

சுமார் 40 ஆண்டுகளுக்கு (1980களில்) முன்பாக நெல்லைக் கலாச்சாரச் சங்கத்திற்காக நானும் என் நண்பர் பி ஆர் விசுவநாதன் அவர்களும் ஏற்பாடு செய்த கூட்டத்தில் மேற்கண்டவாறு தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் பேசியதாக ஞாபகம்.

முதன்முதலாக தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் ஒரு மணி நேரம் பேசியது நெல்லைக் கலாச்சாரச் சங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தான்!

“பத்து நிமிடங்கள்அல்லது 15 நிமிடங்கள் அதற்குமேல் நான் பேசியது இல்லை. நெல்லை வானொலியில் இருந்தபோதுகூட பல ஊர்களில் பொதுக்கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன். அங்கு எல்லாம் கூட அதிகபட்சமாக 15 நிமிடங்கள் தான் பேசி இருக்கிறேன். முதன்முதலாக என்னை ஒருமணிநேரம் சிறப்புரையாற்ற கீழாம்பூர் கேட்டுக்கொண்டார்”. இப்படி அவரே அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.

என்னுடைய இனிய நண்பரும் காட்பரீஸ் சாக்லேட் நிறுவனத்தில் வேலை செய்த வருமான கவிஞர் மீ‌. விசுவநாதன் அவர்களும் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார். நானும் மீ. விஸ்வநாதன் அவர்களும் ஐஸ்கிரீமில் சாக்லேட்டைப் போட்டு நன்றாகக் கலக்கி மவுண்ட்ரோடு மாடியிலுள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டது இன்றும் (நாவிலும் கூடத்தான்) நினைவில் நிற்கிறது.

ஐஸ்கிரீமில் இருந்து மீண்டும் தைப்பூசத்திற்கு வருகிறேன். மலேசியா சிங்கப்பூர் இலங்கை அமெரிக்கா ஆஸ்திரேலியா என்று இன்று பல வெளிநாடுகளிலும் தமிழர்களால் தைப்பூச திருவிழா பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.

எட்டாம் நூற்றாண்டிலேயே தைப்பூசத் திருவிழாவை தமிழர்கள் கொண்டாடி உள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. ‘தைப்பூசமாடி உலகம் பொலி வெய்த’ …… என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடியிருப்பதைப் பார்க்கிறோம். திருவிடை மருதூரில் நான்கு நாட்கள் தைப்பூசத்தை ஒட்டி கூத்தர்களின் கூத்து நிகழ்ச்சி நடைபெற்றதாக மகாலிங்க சுவாமி கோவிலில் உள்ள சோழர் கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. எனவே தைப்பூச விழா என்பது தமிழர்களின் பாரம்பரிய விழா என்பதை உணர முடிகிறது.

சிவபெருமான் தனியாக நடனம் ஆடியதை மார்கழி திருவாதிரை என்கிறோம். உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடிய நாள் தைப்பூச நாளாகும். சிவன் கோவில்களில் முருகன் கோவில்களில் தைப்பூச நாளில் சுவாமி புறப்பாடும் தெப்போற்சவமும் நடத்தப்படுவதுண்டு. பழனியில் தைப்பூச நாளில் தேரோட்டம் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

25-1-1872 அன்றுதான் (தைப்பூச நாளில்) அருட்பிரகாச வள்ளலார் ஜோதி வழிபாட்டைத் தொடங்கினார் என்று சொல்வார்கள்…..

  • கட்டுரையாளர் – ஆசிரியர், கலைமகள் மாத இதழ்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories