February 20, 2026, 1:27 PM
30 C
Chennai

சுபாஷிதம்: எதில் திருப்தி? எதில் அதிருப்தி?

subhashitam_1-5-696x392-1
subhashitam_1-5-696×392-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

100. எதில் திருப்தி? எதில் அதிருப்தி? 

ஸ்லோகம்:

சந்தோஷஸ்த்ரிசு கர்தவ்ய: கலத்ரே போஜன தனே |
த்ரிஷு சைவ ந கர்தவ்யோ௨த்யயனே ஜபதானயோ: ||
– பஞ்சதந்திரம்

பொருள்:

மனைவி விஷயத்தில், உணவு விஷயத்தில், செல்வம் விஷயத்தில் திருப்தியாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும். திருப்தியடையாமல் தொடர வேண்டிய விஷயங்கள் கல்வி, ஜபம், தானம் என்னும் மூன்று.

விளக்கம்:

மனிதன் திருப்தியோடு விளங்க வேண்டும் என்று போதிக்கும் சுபாஷிதங்கள் ஏராளம் உள்ளன. எதில் திருப்தி அடைய வேண்டும்? எங்கு திருப்தி அடையக்கூடாது? என்று கூறும் சுலோகம் இது.

மனைவியிடம் திருப்தி அடையாதவன் கீசகன் போன்றவன். மற்றுமொரு ராவணன் போன்றவன். உணவில் திருப்தி அடையாதவன் ஓநாய் போன்றவன். பகாசுரன் போன்றவன். இருக்கும் செல்வத்தைக் கொண்டு திருப்தியாக வாழ முடியாதவன் பொன் முட்டையிடும் வாத்தைக் கொன்ற பேராசைக்காரன் போன்றவன். 

இருப்பதைக் கொண்டு திருப்தி அடையாமல் துயரப்படுவதால் பிறர் பொருள் மேல் மோகம் ஏற்படக் காரணமாகி விடும் என்ற எச்சரிக்கை இந்த ஸ்லோகத்தில் ஒலிக்கிறது. 

கல்வி, ஜபம், தானம் இம்மூன்றிலும் திருப்தி அடையாமல் தினமும் ஆசை அதிகரிக்க வேண்டும். வேதங்களை பிரதி தினமும் அத்யயனம் செய்ய வேண்டும்.  ‘வேதோ நித்யமதீயதாம்’ என்கிறார் ஆதிசங்கரர். ஜபம் செய்வதில் திருப்தி அடையாமல் அனுதினமும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

இதில் திருப்தி அடைந்து நிறுத்திவிட்டால் மந்திரத்தை மறந்து போகும் அபாயம் உள்ளது. தானமும் நிரந்தரம் செய்து வரவேண்டும். ஒரு லட்சம் செலவுகள் இருந்தாலும் தானம் செய்ய வேண்டும் என்பர் சான்றோர்.  

தனக்காக தான் செலவு செய்து கொள்வது வீண். புண்ணியக் கணக்கில் சேராது. பிறருக்காக செலவு செய்வதே சித்திரகுப்தன் எழுதும் புண்ணியக் கணக்கில் சேரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories