சுபாஷிதம்: எதில் திருப்தி? எதில் அதிருப்தி?

subhashitam_1-5-696x392-1
subhashitam_1-5-696×392-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

100. எதில் திருப்தி? எதில் அதிருப்தி? 

ஸ்லோகம்:

சந்தோஷஸ்த்ரிசு கர்தவ்ய: கலத்ரே போஜன தனே |
த்ரிஷு சைவ ந கர்தவ்யோ௨த்யயனே ஜபதானயோ: ||
– பஞ்சதந்திரம்

பொருள்:

மனைவி விஷயத்தில், உணவு விஷயத்தில், செல்வம் விஷயத்தில் திருப்தியாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும். திருப்தியடையாமல் தொடர வேண்டிய விஷயங்கள் கல்வி, ஜபம், தானம் என்னும் மூன்று.

விளக்கம்:

மனிதன் திருப்தியோடு விளங்க வேண்டும் என்று போதிக்கும் சுபாஷிதங்கள் ஏராளம் உள்ளன. எதில் திருப்தி அடைய வேண்டும்? எங்கு திருப்தி அடையக்கூடாது? என்று கூறும் சுலோகம் இது.

மனைவியிடம் திருப்தி அடையாதவன் கீசகன் போன்றவன். மற்றுமொரு ராவணன் போன்றவன். உணவில் திருப்தி அடையாதவன் ஓநாய் போன்றவன். பகாசுரன் போன்றவன். இருக்கும் செல்வத்தைக் கொண்டு திருப்தியாக வாழ முடியாதவன் பொன் முட்டையிடும் வாத்தைக் கொன்ற பேராசைக்காரன் போன்றவன். 

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

இருப்பதைக் கொண்டு திருப்தி அடையாமல் துயரப்படுவதால் பிறர் பொருள் மேல் மோகம் ஏற்படக் காரணமாகி விடும் என்ற எச்சரிக்கை இந்த ஸ்லோகத்தில் ஒலிக்கிறது. 

கல்வி, ஜபம், தானம் இம்மூன்றிலும் திருப்தி அடையாமல் தினமும் ஆசை அதிகரிக்க வேண்டும். வேதங்களை பிரதி தினமும் அத்யயனம் செய்ய வேண்டும்.  ‘வேதோ நித்யமதீயதாம்’ என்கிறார் ஆதிசங்கரர். ஜபம் செய்வதில் திருப்தி அடையாமல் அனுதினமும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

இதில் திருப்தி அடைந்து நிறுத்திவிட்டால் மந்திரத்தை மறந்து போகும் அபாயம் உள்ளது. தானமும் நிரந்தரம் செய்து வரவேண்டும். ஒரு லட்சம் செலவுகள் இருந்தாலும் தானம் செய்ய வேண்டும் என்பர் சான்றோர்.  

தனக்காக தான் செலவு செய்து கொள்வது வீண். புண்ணியக் கணக்கில் சேராது. பிறருக்காக செலவு செய்வதே சித்திரகுப்தன் எழுதும் புண்ணியக் கணக்கில் சேரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories