போலி இ-டிக்கெட் எடுத்து மோசடி! அதிகாரியிடம் மாட்டிய பெண்!

airport-Chennai-1
airport-Chennai-1

விமான நிலையத்தில் கணவரை வழி அனுப்புவதற்காக மனைவி போலியான இ-டிக்கெட் மூலம் விமான நிலையத்திற்குள் வந்ததற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சார்ஜா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது.

அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் மட்டும் ஆவண பரிசோதனை நடைபெற்றுள்ளது. இந்தப் பரிசோதனை முடிந்த பின் அவர்கள் விமானநிலையத்தின் உட்பகுதிக்குள் அனுப்பப்பட்டுள்ளனர். அந்த சமயத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள நவாஸ் ஷேக் மற்றும் அவருடைய மனைவி சனா இருவரும் இ-டிக்கெட்டை காட்டிவிட்டு உள்ளே சென்றுள்ளனர். பின்னர் 1 1/2 மணி நேரம் கழித்து சனா மற்றும் வெளியே வந்துள்ளார்.

இதனை கண்ட பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அவர் தான் பயணத்தை ரத்து செய்து விட்டேன் என் கணவன் மட்டும் பயணிக்கிறார் என்று கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வரவே அவர்கள் இ-டிக்கெட்டை காட்டும்படி கூறியுள்ளனர். அவர் காண்பித்த இ-டிக்கெட்டில் பயணி அப்லோடு செய்ததற்கான எந்த முத்திரையும் பதிவிடவில்லை. எனவே பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரை நிறுத்திவைத்து விசாரித்தபோது சனா மற்றும் அவரது கணவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது.

இந்த சூழ்நிலையில் கணவர் வேலைக்காக சார்ஜா செல்ல தயாராகியுள்ளார். இதனால் கணவரை விட்டு பிரிய மனமில்லாமல் வழியனுப்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சனா வந்துள்ளார். ஆனால் பார்வையாளர்களுக்கு தற்போது சென்னை விமான நிலையத்தில் அனுமதி இல்லாத காரணத்தினால் அவர் போலியான இ-டிக்கெட்டை தயாரித்து அதன் மூலம் விமான நிலையத்திற்குள் வந்து சோதனை நடக்கும் பகுதிவரை சென்றுள்ளார்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

பின்பு அங்கு கணவருடன் சிறிது நேரம் கழித்த பின்னர் கணவரை சார்ஜா செல்லும் விமானத்தில் அனுப்பி வைத்துவிட்டு சனா மட்டும் வெளியே வந்துள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாதுகாப்பு படை அதிகாரிகள் விமானநிலையத்தில் மோசடி செய்ததாக கூறி அவரை கைது செய்து விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories