விநோதமா இருக்கேன்னு… வீட்டுக்கு தூக்கிட்டு வந்தா… ரூ.2 கோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Published:

2crore luck - 2026

வினோதமாக இருக்கிறதே என்று வீட்டுக்கு எடுத்து வந்தால்… இரண்டு கோடி ரூபாய் லாபம்.

பொழுதுபோக்கிற்காக பீச்சுக்கு சென்ற ஒரு பெண்ணுக்கு ஒரு வினோதமான பொருள் கண்ணில்பட்டது. அருகில் சென்று பார்த்தபோது ஒரு மீனைப் போல் நாற்றம் எடுத்தது. சிறிது நேரம் அப்படி இப்படி பார்த்து விட்டு அது என்னதான் பார்ப்போமே என்று வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

அதைப் பற்றி ஆராய்ந்த போது அது கோடிக்கணக்கான பண மதிப்பு மிகுந்தது என்று தெரிந்து வாயடைத்துப் போனார்.

அந்த பொருள் என்னவென்று தெரியுமா?

திமிங்கிலம் வாந்தி எடுக்கும் போது வெளியில் வந்து விழும் திரவம் அது. இதனை அம்பர்கிரீஸ் என்பார்கள்.

தாய்லாந்தில் உள்ள நகோன் சி தம்மரத் பிராவின்சில் வசிக்கும் சரிபோர்ன் நயாம்ரின் (49) என்ற பெண்மணி தன் வீட்டுக்கு அருகில் உள்ள கடற்கரைக்கு பிப்ரவரி 23ஆம் தேதி சென்ற போது கிடைத்ததே இந்த அம்பர்கிரீஸ்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

இதன் மதிப்பு நம் இந்திய பணத்தின் படி சுமார் இரண்டு கோடி ரூபாய். இது 24 இன்ச் நீளம் 12 இன்ச் அகலம் 7 கிலோ எடையோடு இருந்தது.

ஸ்பேர்ம்ஸ் வேல்ஸ் ரகத்தைச் சேர்ந்த திமிங்கிலங்கள் பிற உயிரினங்களை விழுங்கும் போது அவற்றின் கூர்மையான பகுதிகளால் திமிங்கலத்தின் வயிறு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அம்பர்கிரீஸ் என்ற திரவத்தை சுரக்கும். இது வாயிலிருந்து வெளியில் வரும்போது உருண்டையாக வந்துவிழும். அது சாம்பல் நிறத்தில் ஒரு மெழுகு உருண்டை போல் இருக்கும். இது எரியக்கூடிய இயல்பு கூட கொண்டது.

மிகவும் விலை மதிப்பானது. ஆல்கஹால் குளோரோஃபார்ம் மற்றும் பிற எண்ணெய்களின் கரையக்கூடியது. இதனை அதிகமாக சுகந்த திரவியங்கள் தயாரிப்பதில் பயன்படுத்துவார்கள். அதிகமாக கிடைக்காது. மிகவும் அரிதாகவே கிடைப்பதால் இதனை நீரில் மிதக்கும் தங்கம் என்று கூட அழைப்பார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img