விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 15)

manakkula vinayakar

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

பாடல் 17 – வெண்பா

முறையே நடப்பாய் முழுமுட நெஞ்சே,
இறையேனும் வாடா யினிமேல் – கறையுண்ட
கண்டன் மகன் வேத காரணன் சக்தி மகன்
தொண்டருக் குண்டு துணை.

பொருள் – ஆலகால விஷத்தை அருந்தியதனால் நீல நிறக் கழுத்தினை உடைய சிவபெருமானின் திருமகனும், ஓம் எனத் தொடங்கும் வேதங்களுக்கு முழு முதற் காரணமாய் உள்ளவரும், சக்தி மகனுமாகிய விநாயகரின் துணை தொண்டர்களு உண்டு என்பதை அறியாமல் அறிவின்றி நடக்கும் நெஞ்சே நமக்கு குறைவாகக் கிடைத்துவிட்டதே என வாடாமல் முறையான வழியில் நடப்பாயாக.

பாடல் ‘முறையே’ எனத் தொடங்கி ‘துணை’ என முடிகிறது.

கரையுடை கண்டன் கதை

சிவபெருமான் பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர். அவரின் பிணையப்பட்ட சடை, கழுத்தை சுற்றியுள்ள பாம்பு, அவரின் திரிசூலம், மூன்று கண்கள் மற்றும் அவர் கோபத்துடன் இருக்கும் சமயத்தில் அழித்தலை உண்டு பண்ணும் மூன்றாவது கண். சிவபெருமானின் மற்றொரு சிறப்பான விஷயம் அவரின் நீல நிற தொண்டை போன்ற ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விளக்கம் உண்டு. அவரது நீல நிற தொண்டைக்கும் ஒரு காரணம் உள்ளது.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

மனிதர்களின் நலனுக்காக கொடிய நஞ்சை சிவபெருமான் விழுங்கியது தான் அவரது நீல நிற கழுத்திற்குக் காரணம். இந்துக்களின் சமயத்திரு நூல்களில் சிவபெருமானைப் பற்றி ஏராளமான ஆச்சரியங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இத்தனை அதிசயங்களில், நஞ்சை விழுங்கியது தான் மனிதர்கள் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக உள்ளது. நம்மை அனைத்து வழிகளிலும் சிவபெருமான் எப்படி காக்கிறார் என்பதை பற்றிய கதை மட்டுமல்ல இது; மாறாக இது ஒரு பாடமாகவும் நமக்கு விளங்குகிறது.

எப்போதுமே தீமைகளை அடக்கவோ அல்லது அதற்கு எதிர் செயலாற்றவோ வேண்டிய அவசியமில்லை என்பதே சிவபெருமானின் நீல நிற தொண்டை எடுத்துக்காட்டுகிறது. சில நேரங்களில் எதிர்மறைகளை மாற்றி அதனை செயலிழக்க செய்ய வேண்டும்.

பாற்கடலை கடைதல்

பாற்கடலுக்கு அடியில் இருக்கும் அமுதத்தை எடுக்க தேவர்களும், அரக்கர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலை கடைந்தனர். கடைந்து கொண்டிருந்த போது, கடலில் இருந்து பல பொருட்கள் வெளியே வந்தது. விலை மதிப்பில்லா கற்கள், விலங்குகள், தங்கம், வெள்ளி, லக்ஷ்மி தேவி, தன்வந்திரி போன்றவைகள் அவற்றில் சில. இவைகளை தேவர்களும் அரக்கர்களும் பங்கு போட்டுக் கொண்டனர். கடலில் இருந்து வந்த பல பொருட்களில், ஆலகாலம் என்ற கொடிய நஞ்சும் ஒன்று.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

மிகவும் கொடிய நஞ்சான அதனை அருகில் கொண்டு சென்ற அனைவரும் மாண்டனர். ஏன், தேவர்களும் அசுரர்களும் கூட, நிலை குலைந்து மரண படுக்கைக்கு சென்றனர். அப்போது தான் சிவபெருமானின் உதவியை நாடி, விஷ்ணு பகவானும் பிரம்ம தேவனும் வேண்டிக் கொண்டனர்.

சிவபெருமான் இந்த நஞ்சை கட்டுப்படுத்தி செரிமானம் செய்யும் சக்தி சிவபெருமானிடம் மட்டுமே இருந்தது. சக்தி இருந்த காரணத்தினால், அந்த நஞ்சை விழுங்கும் பொறுப்பை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார்.

ஆலகால குடித்த சிவபெருமானின் உடலில் அது பரவ தொடங்கியது. வெகு விரைவில் அந்த நஞ்சு அவரை பாதிக்க தொடங்கி அவரின் உடலை நீல நிறத்தில் மாற செய்தது. பார்வதி தேவியின் பங்கு நஞ்சு பரவி கொண்டிருந்த அபாயம் காரணமாக மகாவித்யா வடிவில் சிவபெருமானின் தொண்டையில் இறங்கினார் பார்வதி தேவி. பின் அவர் தொண்டையோடு விஷத்தை கட்டுப்படுத்தினார். அதனால் நீல நிற தொண்டைக்கு ஆளான சிவபெருமான் நீலகண்டர் ஆனார்.

நீலகண்டன் தத்துவம்

நீலகண்டனின் முக்கியத்துவம் நீல நிற நஞ்சு நம் வாழ்க்கையில் உள்ள எதிர்மறையான சிந்தனைகள் மற்றும் தீமைகளை குறிக்கும். சிவபெருமானின் தொண்டையில் இருக்கும் நஞ்சு, அதனை விழுங்கவும் முடியாது – துப்பவும் முடியாது என்பதை குறிக்கும். ஆனால் காலப்போக்கில் அதனை கட்டுப்படுத்தி செயலிழக்கச் செய்யலாம்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

அதனால், நம் எதிர்மறையான சிந்தனைகளை கட்டுப்படுத்தி, நம் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதையே நீலகண்டன் குறிக்கிறது. இதைத்தான் பாரதியார் நெஞ்சிற்கு எதைப் பற்றியும் கவலைப்படாமல் முறைப்படி நடக்கவேண்டும் என்று அறிவுறுத்தும்போது விநாயகரை நீலகண்டன் மகன் எனப் பொருத்தமாகக் கூறுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories