திரைப்படத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வு! கவனம் பெறும் கலெக்டரின் பதிவு!

vijayakarthikeyan - 2026

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகிறது தேர்தல் ஆணையம். இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் வலிமை படத்தை பயன்படுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தேர்தல் விழிப்புணர்வு பிரசார போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

‘வலிமை’ படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அந்தப் படத்தின் அப்டேட் என்று கூறி ட்வீட் செய்திருந்த மாவட்ட ஆட்சியரின் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட அப்டேட் என்று கூறி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் மாவட்ட ஆட்சியர் சிவகார்த்திகேயன், ‘முகக்கவசம் அணிந்து வாக்களிக்க வாருங்கள் – டாக்டர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதில் சிவகார்த்திகேயன் முகக்கவசம் அணிந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு போஸ்டர் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

dr 1 - 2026

இதைப்பார்த்த சிவகார்த்திகேயன், ‘உண்மையிலேயே இது மிகவும் பொறுப்பான ஒரு செயல். இதில் நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன். தயவு செய்து அனைவரும் வாக்களிக்க செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்’ என்று மாவட்ட ஆட்சியரின் ட்வீட்டை மேற்கோள்காட்டி குறிப்பிட்டார்.

சிவகார்த்திகேயனின் பதிவுக்கு பதிலளித்த ஆட்சியர் விஜயகார்த்திகேயன், ‘அதான் டாக்டரே சொல்லிட்டாரே. நாம் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்வோம்’ என்று கூறியுள்ளார். இந்த இருவரது ட்விட்டர் உரையாடல் சமூகவலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Topics

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Entertainment News

Popular Categories