ஹோலிகா பௌர்ணமி!

Published:

chaitanya mahaprabhu - 2026

இன்று 28 மார்ச் 2021 ஞாயிற்றுக்கிழமை ஹோலிகா பௌர்ணமி, மதன பவுர்ணமி, டோலோற்சவம், லக்ஷ்மி ஜெயந்தி, பிரம்ம ஸாவர்ணிக மன்வாதி, சைதன்ய மகாபிரபு ஜெயந்தி ஆகிய புண்ணிய தினங்கள் ஒன்றான சுபவேளை.

ஹோலிகா பூர்ணிமா:
காலையில் எழுந்து குச்சிகளையும் வரட்டிகளையும் அடுக்கி அக்னி மூட்டி அதில் ராக்ஷஸ பீடை தொலைவதற்காக ஹோலிகா என்று சக்தியை ஆவாகனம் செய்து, “ஸ்ரீ ஹோலிகாயை நமஹ”, என்று பூஜை செய்து மூன்று முறை பிரதட்சணம் செய்து, “வந்திதாசி சுரேந்த்ரேண ப்ரஹ்மணா சங்கரேண ச, அதஸ்த்வாம் பாஹினோ தேவி பூதே பூதி ப்ரதோ பவ” என்ற ஸ்லோகத்தைச் சொல்லி பிரார்த்திக்க வேண்டும்.

டோலோத்ஸவம்:
பாலகிருஷ்ணனை அல்லது ராதாகிருஷ்ணனை ஊஞ்சலில் வைத்து இன்று வழிபட வேண்டும். இதனைச் செய்வதால் வைகுண்ட பிராப்தி கிடைக்கிறது. “நரா: டோலாகதம் த்ருஷ்ட்வா கோவிந்தம் புருஷோத்தமம், பால்குண்யாம் ப்ரியதோ பூத்வா கோவிந்தஸ்ய புரம் வ்ரஜேத்” என்ற ஸ்லோகத்தைச் சொல்லி ஊஞ்சலை ஆட்ட வேண்டும்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

லக்ஷ்மி ஜெயந்தி:
பாற்கடலிலிருந்து லக்ஷ்மி தேவி தோன்றிய நாளான இன்று ஸ்ரீ லக்ஷ்மி தேவியை வழிபடுவதால் அம்மனின் அனுக்கிரகத்தை பெறமுடியும்.

ஶ்ரீசைதன்ய மஹாப்ரபு ஜெயந்தி:
ஸ்ரீ கிருஷ்ண பக்தி சாம்ராஜ்யத்தின் அதிநேதாவான ஸ்ரீசைதன்ய மஹாபிரபு பிறந்த நாளான இன்று அவருடைய கதாம்ருதத்தை படிப்பதாலும், நாம சங்கீர்த்தனம் செய்வதாலும் பரமாத்மாவின் அருள் கிடைக்கிறது.

(நன்றி- ருஷிபீடம் மாத இதழ் மார்ச் 2021)

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img