December 6, 2025, 9:40 AM
26.8 C
Chennai

கொரோனா அண்டாமல் இருக்க… சித்த மருத்துவ டிப்ஸ்!

neem thulsi
neem thulsi

கொரோனா நம்மை அண்டாமல் இருக்க… வந்தது போல் நமக்கு சந்தேகம் வந்தால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள இவற்றை கடைபிடியுங்கள்!

இந்த அலையில் அறிகுறிகள் இல்லாமல் எவரும் வருவதில்லை. அதுதான் உண்மை. குடும்பத்தில் ஓர் உறுப்பினருக்கு பாசிட்டிவ் என்று வந்தால், அல்லது எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் ஏதோ ஒரு நேரத்தில் பரிசோதனை மேற்கொண்டு அவர்களுக்கும் பாசிட்டிவ் என்று வந்தால், அவர்களது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு காய்ச்சல் வந்து விடுகிறது.

அப்படிப் பட்டவர்கள் முதலில் செய்ய வேண்டியது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, உடனே சோதனைக்குச் செல்வதுதான்.

சோதனைக்காக சாம்பிள் கொடுத்து விட்டு அதன் முடிவுகளுக்காக காத்திருக்கும் நாலைந்து நாள் இடைவெளியில் போது கூட மருந்து எடுத்துக் கொள்ளத் தொடங்க வேண்டும்.

  1. ஒரு டீஸ்பூன் நிலவேம்பு குடிநீர் சூரணம், அரை டீஸ்பூன் யஷ்டி சூரணம் (அதிமதுரம்) இரண்டையும் கலந்து, 80 மில்லி தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். ஒவ்வொரு முறையும் புதிதாகத் தயாரித்து 5 நாட்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை இதைக் குடிக்க வேண்டும்
  2. ஆடோதோடை குடிநீர் சூரணம் ஒரு டீஸ்பூன் 60 மிலி நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு நாளைக்கு இரு வேளை குடிக்க வேண்டும். குறிப்பாக, சளி, இருமல், தொண்டை கரகரப்பு இருந்தால் அல்லது சுவாசிப்பதில் லேசான சிரமம் இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு வேளை இதனை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் மோசமடைந்தால் CT ஸ்கேன் எடுத்துக் கொள்ளலாம்.
    மேலும்,
  3. திப்பிலி ரசாயனம் அரை டீஸ்பூன் ஒரு நாளைக்கு இரண்டு முறை
  4. வயிற்றுப்போக்கு என்றால் Tab. Qura மூன்று வேளை எடுத்துக் கொள்ளலாம் (பலருக்கு 4 வது நாளில் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது)
  5. தொண்டை கரகரப்பு, இருமல், எரிச்சலுக்கு தாளிசாதி வடகம்
  6. சர்க்கரை – நீரிழிவு மருந்துகள் எடுத்துக் கொள்பவராயிருந்தால்… அதனை வழக்கம் போல் தொடரவேண்டும். சர்க்கரை, இரத்த அழுத்த அளவு அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
  7. ரத்த உறைதல், பக்கவாதத்தைத் தடுக்க, சித்தரத்தை, சுக்கு, லவங்கப்பட்டை ஒவ்வொன்றும் ஒரு கிராம் எடுத்துக் கொண்டு, கஷாயம் செய்து, ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் உப்பு கலந்த நீரால் வாய் கொப்புளிக்க வேண்டும்.

தூய நீராவியால் ஆவி பிடித்தல்

லேசான எண்ணெய் அல்லாத உரப்பு இல்லாத உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், புளிப்பான மோர் கண்டிப்பாக தவிர்க்கவும்

காய்கறிகள் மற்றும் பழங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

Qura என்பது குடசபாலை பட்டை . Impcops SKM LSS ஆகிய நிறுவனங்கள் சரியான மூலிகைகளை சேர்த்து செய்கிறார்கள். அதை மட்டும் பார்த்து வாங்கினால் நல்லது

வயிற்றுப்போக்கு இருந்தால், ஓமம் கலந்த இட்லி சாப்பிடலாம். (இட்லி மாவில் ஓமம் கலந்து வேகவைத்து சாப்பிட வேண்டும்)

காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கு இருந்தால், அதுவும் கோடைகாலத்தில் இருந்தால்… வீட்டில் தயாரிக்கப்பட்ட உப்பு சர்க்கரை கரைசல் அல்லது அரிசி கஞ்சி எடுத்துக் கொள்ளலாம்.

vapour 1
vapour 1

தலைவலி என்பது நீர்ச்சத்து இழப்பைக் காட்டுவது மற்றும் குறைக்கப்பட்ட ஆக்ஸி செறிவூட்டலின் அறிகுறி.
சோர்வு அதிகரிக்கும் என்பதால் உணவைத் தவிர்க்க வேண்டாம்.

உடல் வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் செறிவை சீரான இடைவெளியில் சோதித்துக் கொள்ள வேண்டும். (ஒரு தெர்மா மீட்டர், ஆக்சிமீட்டர் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது)

ஆக்ஸிஜன் செறிவூட்டலை மேம்படுத்தி சுவாசத்தை சீராக்க, வசதியான படுக்கை நிலையை மேற்கொள்ளலாம்.
தொடர்ந்து, உங்கள் மருத்துவருடன் தொடர்பில் இருங்கள்.

முன்னெச்சரிக்கை மற்றும் வெளியில் சென்று வந்து நமக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டால்,
நிலவேம்பு குடிநீர் சூரணம் ஒரு டீஸ்பூன் மற்றும் அதிமதுரம் (யஷ்டி சூரணம்) அரை டீஸ்பூன், 80 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை மூன்று நாட்களுக்கு பருக வேண்டும். காலை மாலை இரு வேளையிலும் புதிதாகத் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.

  • டாக்டர் திருநாராயணன் திருமலைசுவாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories