April 19, 2025, 5:19 AM
29.2 C
Chennai

பாரதப் பிரதமரின் புயல் சேத கூட்டத்தை புறக்கணித்து… கொடூர முகத்தைக் காட்டிய மேற்கு வங்க முதல்வர்!

westbengal meeting
westbengal meeting

மேற்கு வங்கத்தில் ‘யாஸ்’ புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தினை முதல்வர் மம்தா புறக்கணித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேற்கு வங்க முதல்வருடன் அம்மாநில தலைமைச் செயலாளரும் இக் கூட்டத்தைப் புறக்கணித்ததைத் தொடர்ந்து அவர் நேற்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

‘யாஸ்’ புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோதி, விமானம் மூலம் நேற்று காலை மேற்கு வங்கம் வந்தார். பின்னர் பாதிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பிரதமர் நரேந்திர மோதியும், மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரும் கலந்து கொண்டனர். அவர்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்தபோது, அம்மாநில அரசின் சார்பில் முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வரவில்லை.

இதனால் பிரதமர் மோதி, அரை மணி நேரம் காத்திருந்தார். அப்போது அங்கெ திடீரென வந்த மம்தா, பிரதமரிடம் அறிக்கை ஒன்றை அளித்துவிட்டு, தாம் வேறு கூட்டத்துக்கு செல்ல வேண்டி இருப்பதாகக் கூறி புறப்பட்டுவிட்டார். நாட்டின் வரலாற்றில் இதுவரை எந்த முதல்வரும் இதுபோல ஆணவத்துடனும் பொறுப்பற்ற தன்மையுடனும் நாட்டின் பிரதமரிடம் நடந்து கொண்டது இல்லை என்ற கருத்துகள் இப்போது எழுந்துள்ளன.

முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து, அம்மாநில தலைமைச் செயலாளர், மாநில அரசு உயர் அதிகாரிகள் என அனைவரும் பிரதமர் நடத்திய கூட்டத்தைப் புறக்கணித்தனர். இந் நிலையில், மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் அலபோன் பந்தோபாத்யாயா அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மத்திய அரசுப் பணிக்கு அழைக்கப்பட்டார்.

ALSO READ:  ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

1987-ம் ஆண்டின் ஐ.ஏ.எஸ். கேடரான இவர் கோல்கத்தா மாநகராட்சி ஆணையராகவும் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராகவும் பணியாற்றி வந்தவர். அவர் மாற்றப் பட்டதை அடுத்து, மாநில நிதித்துறை செயலாளராக பதவி வகித்து வந்த எச்.கே.திவேதி என்பவர் தற்காலிக புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம், நாட்டின் நிர்வாக அமைப்பு முறையையே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளன. மம்தா அவமதித்தது மோதி என்ற நபரை அல்ல, நாட்டின் பிரதமரை என்று சமூக மட்டத்தில் கருத்துகள் பகிரப் படுகின்றன.

ALSO READ:  உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

அடுத்து வரும் தேர்தலில், தன்னை காங்கிரஸுக்கு மாற்றாக முன்னிலைப் படுத்த விரும்பியுள்ள மம்தா பானர்ஜி, அதற்காக மோடி எதிர்ப்பு என்பதைக் கையில் எடுத்துள்ளார். ஆனால் அதனால் மாநிலம் பல்வேறு வகையில் பாதிக்கப் படும் என்பதை அவர் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை என்பதும், அதிகார வெறியில் நாட்டின் நலனை காவு கொடுத்துள்ள மம்தா பானர்ஜி விரைவில் அதற்கான பலனை அனுபவிப்பார் என்றும் கருத்துகள் பொதுவெளியில் பகிரப்பட்டு வருகின்றன.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories