வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்கள் கொரோனாவால் பாதிப்பு!

vandaloor zoo lion
vandaloor zoo lion

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மனிதர்களிடையே பரவி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளுக்கும் பரவியிருப்பதாக கடந்த ஆண்டே செய்தி வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த வருடம் கொரோனா பரவத் தொடங்கிய நேரத்தில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 8 சிங்கங்களுக்கும், ஹாங்காங்கில் நாய், பூனைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த மாதமும்கூட, இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் 8 புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப் பட்டது. தற்போது, சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

vandaloor zoo
vandaloor zoo

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களுக்கு பசியின்மை, சளித் தொந்தரவு என இருந்துள்ளது. இதை அடுத்து, மாதிரிகள் எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் இருக்கும் காரணத்தால், கடந்த மே 26ஆம் தேதி முதல் பூங்கா காலவரையரை இன்றி மூடப்பட்டுள்ளது. பூங்காவினுள் செல்ல பூங்கா பணியாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டனர். எனவே, பூங்கா பணியாளர்கள் மூலமாக விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவியதா என விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இந்நிலையில், ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் இருந்து சிகிச்சைக்கான ஆலோசனைகளை வண்டலூர் பூங்கா அதிகாரிகள் கேட்டுள்ளதாகவும், அதுபோல், உயர் பாதுகாப்பு விலங்கின நோய்களுக்கான தேசிய இயக்ககத்தில் இருந்தும் ஆலோசனைகளைக் கேட்டுள்ளதாகவும் கூறப் படுகிறது.

இதனிடையே, ஒரு சிங்கம் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது. தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்கள் உள்ளன. அவற்றில் ஆறு ஆண் சிங்கங்களும் ஏழு பெண் சிங்கங்களும் அடக்கம். சிங்கக் குட்டிகள் எதுவும் தற்போதைக்கு பூங்காவில் இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

Entertainment News

Popular Categories