December 6, 2025, 11:48 PM
25.6 C
Chennai

சுவாமி தரிசன நேரம் நீட்டிப்பு! மகிழ்ச்சியில் பக்தர்கள்!

kalakasthi
kalakasthi

ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், கொரோனா 2வது அலையால் தொற்று பரவல் குறையாமல் மார்ச், மே மாதங்களில் அதிகமாகி வந்தது.

குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடியது. மகாராஷ்டிரா, தில்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்தது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெரும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி சின்னாபின்னமான தென்மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகியா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தான் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

ஆந்திர மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. அங்கு ஊரடங்கு கடுமையானதை தொடர்ந்து, தொற்று பாதிப்பு குறைந்தது.

இதனால், அம்மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்தது. அதில், கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி கூறுகையில், “மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்தி, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக காலை 6 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை நேரத்தை நீட்டித்துள்ளது.

இதன் காரணமாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி தினமும் காலை 6 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம்.

ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பக்தர்கள் கலந்துகொள்ளலாம்” என்று கூறினார்.

கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதும், சாமியை தரிசனம் செய்வதற்கான நேரத்தை நீட்டிப்பது போன்ற அறிவிப்பால் பக்தர்கள் ஆனந்தத்துடன் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories