யூரோ கோப்பை கால்பந்து (2021)

euro cup 2021
euro cup 2021

|– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –|

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் 2021

நண்பர்களே, நேற்று யூரோ 2020 கால்பந்து போட்டிகள் தொடங்கின. என்னடா 2021இல் நடக்கின்ற போட்டியை 2020 போட்டி என்று சொல்கிறானே என நினைக்க வேண்டாம். போன ஆண்டு நடக்கவிருந்த கால்பந்து ஆட்டங்கள் கொரொனா காரணமாக இந்து ஆண்டு நடக்கின்றன.

நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடக்கின்ற போட்டி இது. பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், சோவியத் யூனியன் ஆகியவை இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து விளையாட்டுச் சங்கங்கள் இணைந்து நடத்தும் போட்டியிது. சென்ற முறை 2016இல் போர்ச்சுகல் பிரன்சை தோற்கடித்து, முதன் முறையாக கோப்பையை வென்றது.

இம்முறை போட்டிகள் 11 நாடுகளில் நடைபெற உள்ளன. முதல் போட்டி துருக்கி-இத்தாலி இடையே இந்திய நேரப்படி நேற்று (11.06.2021) நள்ளிரவு 1230 மணிக்கு ரோம் நகரில் நடைபெற்றது. துருக்கி அணியைக் காட்டிலும் இத்தாலி அணி பலம் வாய்ந்தது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

தனக்குத்தானே ஆப்பு

போட்டி தொடங்கியதிலிருந்தே துருக்கி அணி தற்காப்பாக ஆடிக் கொண்டிருந்தது. இத்தாலிய அணிப்பகுதியில் ஏறி ஆடவில்லை. இதில் முதல் கோல் துருக்கி அணி வீரரே இத்தாலிக்காகப் போட்டுக்கொடுத்தார்.

இத்தாலிய வீரர் அடித்த பந்தை மெரி டெமிரால் என்ற துருக்கிய வீரர் தடுத்தபோது, பந்து கோனம் மாறி கோலில் போய் விழுந்தது. ஆட்ட்த்தின் 53ஆவது நிமிடத்தில், இரண்டாம் பாதியில் இது நிகழ்ந்தது. ஆட்ட்த்தின் 66ஆவது நிமிடத்தில் இத்தாலியின் சிர்ரோ இம்மொபைல், 76ஆவது நிமிடத்தில் லெரென்சோ இசைனி தலா ஒரு கோல் போட்டார்கள். இவ்வாறாக இத்தாலி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கி அணியை வென்றது.

ஆட்ட நேரத்தில் துருக்கி அணி மூன்று முறைதான் இத்தாலியின் கோல் வரை போனது. ஆனால் இத்தாலி அணி 24 முறை கோல் அடிக்க முயன்றது. இதில் துருக்கி அணியின் இரண்டு வீரர்களுக்கு மஞ்சள் அட்டை தண்டனை கொடுக்கப்பட்டது.

துருக்கி அணி தனக்குத்தானே கோல் போட்டதால் இந்த ஆட்டம் சிறப்பு பெற்றது. இன்று மாலை 0630 மணிக்கு அடுத்த போட்டி வேல்ஸ்-சுவிட்சர்லாந்து இடையே அசர்பைஜான் நாட்டில் பாகு நக்ரில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறுகிறது.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories