திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆந்திர பெண் அங்கப்பிரதட்சணம்!

Published:

mathavi - 2026

கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட, திருவண்ணாமலை கிரிவல பாதையில், ஆந்திராவை சேர்ந்த பெண், அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார்.

கொரோனா தொற்று ஊரடங்கால், திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

madhavi tvmli - 2026

இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட்டு நலம் பெற்று வாழ, ஆந்திர மாநிலம், பீமாவரத்தை சேர்ந்த அருணாசல மாதவி, 48, என்ற பெண், கிரிவலப் பாதையில் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு அங்கப் பிரதட்சணத்தை தொடங்கினார்.

‘ஓம் அருணாசலாய நமஹ’ என்ற மந்திரத்தை கூறி, தினமும் அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, அங்கப்பிரதட்சணம் செய்கிறார். கிரிவலப் பாதையான, 14 கி.மீ., துாரத்தை முழுவதும் முடிக்க ஐந்து நாட்களாகும்.

madhavi - 2026

கடந்த, 15 ஆண்டுகளாக அண்ணாமலையாரின் பக்தையாக உள்ள இவர், ஏற்கனவே மூன்று முறை, உலக மக்கள் நன்மைக்காக, அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img