December 5, 2025, 3:17 PM
27.9 C
Chennai

திமுக., அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, அதிமுக., முன்னாள் அமைச்சர்கள் முழக்கம்!

admk protest madurai2 - 2025

மதுரை: திமுக தேர்தலின் போது, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், பெட்ரோல் மற்றும் டீசல்,சமையல் எரிவாயு ஆகியவை குறைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாடு முழுக்க திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கட்சியினரை வலியுறுத்தினர்.

அதன் அடிப்படையில் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக மாவட்டச் செயலாளர் அலுவலகம் வாசலில், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான செல்லூர் கே. ராஜூ பேசியது:

அதிமுக அரசானது, சொன்ன திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அதிமுக, மத்திய அரசு சுமூக உறவு வைத்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றியது. மதுரை நகரில் பல பாலங்கள், பெரியார் பஸ் நிலைய விரிவாக்கம், தமுக்கம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்டன. அதுபோல், திமுக அரசானது, மக்கள் மத்தியில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.மதுரை அருகே பசுமலையில், அதிமுக மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வே. ராசன் செல்லப்பா தலைமையில் வழக்கறிஞர் ரமேஷ், நிலையூர் முருகன் உள்ளிட்டோர், திமுக., தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.

அப்போது, தமிழகத்தில் வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக உள்ளது என அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்தார்.

admk protest madurai1 - 2025

அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது… அதிமுக குறித்து கடந்த பொதுத் தேர்தலில் திமுக மக்களிடம் பொய் பிரச்சாரங்கள் செய்தும், பொய் வாக்குறுதிகளை அளித்தும் இந்த முறை ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சமையல் கேஸ் ரூபாய் 100 மானியம், குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உள்ளிட்ட எந்தவித வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.

மாறாக அதிமுக கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களான தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள் உள்பட 16 வகையான பொருட்கள் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வு ரத்து என கூறி மாணவர்களை ஏமாற்றி இந்த அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. இதனை கண்டித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவின் பேரில் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர் பொன் முருகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories