February 21, 2026, 2:39 AM
25.6 C
Chennai

மூதாட்டியை ஏமாற்றி ஆன்லைன் வழியாக ரூ. 2கோடி மோசடி!

cimran - 2026

இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுத் தருவதாக கூறி, மூதாட்டியிடம் ‘ஆன்லைன்’ வழியாக 2.06 கோடி ரூபாயை ஏமாற்றிய கும்பலை சேர்ந்த மேலும் ஒருவரை, தில்லியில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, மந்தைவெளியை சேர்ந்தவர் சுதா ஸ்ரீதரன்; 2019ல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, மர்ம நபர்கள் மொபைல் போனில் இவரை தொடர்பு கொண்டனர்.

இறந்த உங்கள் கணவரின் இன்சூரன்ஸ் பணம் நிலுவையில் உள்ளது; அதை பெற்றுத் தருகிறோம் என நம்ப வைத்து, வெவ்வேறு வங்கி கணக்குகளில் 2.06 கோடி ரூபாய் வரை பெற்று ஏமாற்றினர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, தில்லியை சேர்ந்த அமண்பிரசாத் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க, மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார், தில்லி திலக் நகரில் பதுங்கியிருந்த சிம்ரன்ஜித் சர்மா, 29, என்பவரை 24ம் தேதி கைது செய்தனர்.

பின், தீஸ்ஹஜார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சென்னை அழைத்து வந்தனர். விசாரணையில், தில்லியில் உள்ள கேளிக்கை விடுதியில் வேலை பார்த்தபோது, மோசடி கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தமிழகம், கேரளாவில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பின், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories