மூதாட்டியை ஏமாற்றி ஆன்லைன் வழியாக ரூ. 2கோடி மோசடி!

cimran - 2026

இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுத் தருவதாக கூறி, மூதாட்டியிடம் ‘ஆன்லைன்’ வழியாக 2.06 கோடி ரூபாயை ஏமாற்றிய கும்பலை சேர்ந்த மேலும் ஒருவரை, தில்லியில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, மந்தைவெளியை சேர்ந்தவர் சுதா ஸ்ரீதரன்; 2019ல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, மர்ம நபர்கள் மொபைல் போனில் இவரை தொடர்பு கொண்டனர்.

இறந்த உங்கள் கணவரின் இன்சூரன்ஸ் பணம் நிலுவையில் உள்ளது; அதை பெற்றுத் தருகிறோம் என நம்ப வைத்து, வெவ்வேறு வங்கி கணக்குகளில் 2.06 கோடி ரூபாய் வரை பெற்று ஏமாற்றினர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, தில்லியை சேர்ந்த அமண்பிரசாத் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க, மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார், தில்லி திலக் நகரில் பதுங்கியிருந்த சிம்ரன்ஜித் சர்மா, 29, என்பவரை 24ம் தேதி கைது செய்தனர்.

பின், தீஸ்ஹஜார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சென்னை அழைத்து வந்தனர். விசாரணையில், தில்லியில் உள்ள கேளிக்கை விடுதியில் வேலை பார்த்தபோது, மோசடி கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தமிழகம், கேரளாவில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பின், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories