December 5, 2025, 5:52 PM
27.9 C
Chennai

வெளிநாடு போக விரும்பும் மாணவர்களை ஏமாற்றிய தம்பதி! கணவன் கைது! மனைவி தலைமறைவு!

karthika - 2025

வெளிநாடு சென்று படிக்க முயற்சித்து வரும் மாணவர்களை குறிவைத்து ஏமாற்றி வரும் தம்பதிகள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்தில் உள்ள சவுத் வேல்ஸ் யூனிவர்சிட்டியில் சேர்வதற்கான முயற்சிகள் எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது தூரத்து உறவினர்களான செளகார்த்திகா மற்றும் அவரது கணவர் கார்த்தி ஆகியோர் தாங்கள் ரித்விக் என்ற நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து வருவதாகவும் அதன்படியே வெங்கடேஷையும் இங்கிலாந்தில் உள்ள சவுத் வேல்ஸ் யூனிவர்சிட்டியில் சேர்த்து விடுவதாக கூறியுள்ளனர்.

இதை நம்பிய வெங்கடேஷ் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தவணை முறையில் ரூபாய் 38 லட்சம் பணத்தை செளகார்த்திகா மற்றும் அவரது கணவர் கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் சௌகார்த்திகா மற்றும் கார்த்திக் ஆகியோர் இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் யுனிவர்சிட்டியில் வெங்கடேஷ் படிப்பதற்கான மாஸ்டர் டிகிரி ஏரோநாட்டிக்கல் படிப்புக்கான அட்மிஷன் கிடைத்துவிட்டதாக அதற்கான ஆவணங்கள் மற்றும் இங்கிலாந்து நாட்டுக்கான வீசா ஆகியவற்றை கொடுத்துள்ளனர்.

வெங்கடேஷ் அதனை சோதனை செய்து பார்த்தபோது அவை அனைத்தும் போலி என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து செளகார்த்திகா மற்றும் கார்த்திக்கை தொடர்பு கொண்டபோது அவர்கள் தங்களது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெங்கடேஷ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் செளகார்த்திகா மற்றும் அவரது கணவர் கார்த்திக் ஆகியோர் வெளிநாடு சென்று படிக்க முயற்சித்து வரும் மாணவர்களை குறிவைத்து ஏமாற்றி வருவதும், அதன்மூலம் அவர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து செளகார்த்திகா மற்றும் அவரது கணவர் கார்த்திக் மீது விருகம்பாக்கம் போலீசார் நம்பிக்கை மோசடி மற்றும் மோசடி செய்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கணவன் மனைவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் விருகம்பாக்கம் போலீசார் கார்த்திக்கை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான செளகார்த்திகாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories