வெளிநாடு போக விரும்பும் மாணவர்களை ஏமாற்றிய தம்பதி! கணவன் கைது! மனைவி தலைமறைவு!

karthika - 2026

வெளிநாடு சென்று படிக்க முயற்சித்து வரும் மாணவர்களை குறிவைத்து ஏமாற்றி வரும் தம்பதிகள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்தில் உள்ள சவுத் வேல்ஸ் யூனிவர்சிட்டியில் சேர்வதற்கான முயற்சிகள் எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது தூரத்து உறவினர்களான செளகார்த்திகா மற்றும் அவரது கணவர் கார்த்தி ஆகியோர் தாங்கள் ரித்விக் என்ற நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து வருவதாகவும் அதன்படியே வெங்கடேஷையும் இங்கிலாந்தில் உள்ள சவுத் வேல்ஸ் யூனிவர்சிட்டியில் சேர்த்து விடுவதாக கூறியுள்ளனர்.

இதை நம்பிய வெங்கடேஷ் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தவணை முறையில் ரூபாய் 38 லட்சம் பணத்தை செளகார்த்திகா மற்றும் அவரது கணவர் கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் சௌகார்த்திகா மற்றும் கார்த்திக் ஆகியோர் இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் யுனிவர்சிட்டியில் வெங்கடேஷ் படிப்பதற்கான மாஸ்டர் டிகிரி ஏரோநாட்டிக்கல் படிப்புக்கான அட்மிஷன் கிடைத்துவிட்டதாக அதற்கான ஆவணங்கள் மற்றும் இங்கிலாந்து நாட்டுக்கான வீசா ஆகியவற்றை கொடுத்துள்ளனர்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

வெங்கடேஷ் அதனை சோதனை செய்து பார்த்தபோது அவை அனைத்தும் போலி என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து செளகார்த்திகா மற்றும் கார்த்திக்கை தொடர்பு கொண்டபோது அவர்கள் தங்களது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெங்கடேஷ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் செளகார்த்திகா மற்றும் அவரது கணவர் கார்த்திக் ஆகியோர் வெளிநாடு சென்று படிக்க முயற்சித்து வரும் மாணவர்களை குறிவைத்து ஏமாற்றி வருவதும், அதன்மூலம் அவர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து செளகார்த்திகா மற்றும் அவரது கணவர் கார்த்திக் மீது விருகம்பாக்கம் போலீசார் நம்பிக்கை மோசடி மற்றும் மோசடி செய்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கணவன் மனைவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் விருகம்பாக்கம் போலீசார் கார்த்திக்கை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான செளகார்த்திகாவை போலீசார் தேடி வருகின்றனர்.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories