130 பெண்களை கொடூரமாகக் கொன்ற ‘டேட்டிங் கேம் கில்லர்’ மரணம்!

rodney alcala - 2026

அமெரிக்காவில் வசித்த மனித உருவிலான ராட்சசன் காலமானான். 130க்கும் மேலான பெண்களைக் கொடூரமாக மானபங்கம் செய்து கொன்ற குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த நிலையில் அவர் காலமானான்.

பெண்களைக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்வான்.. அதன்பிறகு சுத்தியலால் அடித்து ராட்சசனைப் போல ஆனந்தம் அடைவான்… சாவுக்கும் உயிருக்கும் நடுவில் போராடித் துடிக்கும்போது சற்று நேரம் விட்டு வைப்பான்.. சற்று நினைவு திரும்பியதும் மீண்டும் கொடூரமாக தொந்தரவு செய்வான். அதன்பின் பாதிக்கப்பட்டவரின் காது ஆபரணங்களைப் பறித்து வீட்டில் மறைத்து வைத்துக் கொள்வான். இவ்வாறு பல பெண்களை சித்திரவதை செய்து கொன்ற ராட்சசன் அமெரிக்காவில் ‘தி டேட்டிங் கேம் கில்லர்’ என்று பெயர் வாங்கிய ரோட்னி ஜேம்ஸ் அல்காலா (77) காலமாகியுள்ளான்.

மரண தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு எதிர்பார்த்திருந்த நிலையில், கலிபோர்னியாவில் உள்ள கொர்கோரன் சிறையில் இயற்கையாக மரணம் எய்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

7 பெண்களின் கொலை வழக்கில் அவன் மீது குற்றம் நிரூபணம் ஆனது. ஆனால் உண்மையில் அவன் கையால் 130 பேருக்கு மேலாக பெண்கள் கொலைக்கு ஆளானதாக அதிகாரிகள் நம்புகின்றனர் .

1968 ல் எட்டு வயது சிறுமியின் மீதும் 1974இல் 13 வயது சிறுமி மீதும் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்தான். 1978இல் ‘த டேட்டிங் கேம்’ டிவி ஷோவில் போட்டியில் பங்கு பெற்றான்.

பெண்களின் மீது கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு போட்டோ எடுத்து வைக்கும் பழக்கம் உள்ளது அவனுக்கு. அந்த டிவி ஷோவில் தன்னை போட்டோகிராபராக அறிமுகம் செய்து கொண்டான். அதில் வெற்றியும் பெற்றான். இந்த ஷோவால் அவனுக்கு தி டேட்டிங் கேம் கில்லர் என்று பட்டப் பெயர் வந்தது.

killer - 2026

1979 இல் ராபின் ஸாம்ஸே என்ற 12 வயது சிறுமியை கொலை செய்த குற்றத்துக்காக அல்காலாவுக்கு 1980ல் மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து தண்டனை ரத்தானது. 2010ல் டிஎன்ஏ பரீட்சை மூலம் அவன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால் மரண தண்டனை மீண்டும் விதிக்கப்பட்டது. அதே ஆண்டு மற்றும் நான்கு பெண்களின் கொலை வழக்கில் மரண தண்டனை நிரூபிக்கப்பட்டது. 2013இல் மற்றும் இரண்டு பெண்களின் கொலை வழக்கு நிரூபனம் ஆனதால் 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

அல்காலா ஒளித்து வைத்திருந்த பாதிக்கப்பட்ட பெண்களின் காதணிகள் அவனுடைய குற்றங்களை நிரூபிக்க உதவியதில் முக்கிய பங்கு வகித்தன. அவனுடைய வீட்டில் இருந்த நூற்றுக்கும் மேலான பெண்களின் போட்டோக்களை போலீசார் ஊடகங்களில் வெளியிட்டனர். அதில் பலரை தற்போது காணவில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories