December 5, 2025, 2:29 PM
26.9 C
Chennai

130 பெண்களை கொடூரமாகக் கொன்ற ‘டேட்டிங் கேம் கில்லர்’ மரணம்!

rodney alcala - 2025

அமெரிக்காவில் வசித்த மனித உருவிலான ராட்சசன் காலமானான். 130க்கும் மேலான பெண்களைக் கொடூரமாக மானபங்கம் செய்து கொன்ற குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த நிலையில் அவர் காலமானான்.

பெண்களைக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்வான்.. அதன்பிறகு சுத்தியலால் அடித்து ராட்சசனைப் போல ஆனந்தம் அடைவான்… சாவுக்கும் உயிருக்கும் நடுவில் போராடித் துடிக்கும்போது சற்று நேரம் விட்டு வைப்பான்.. சற்று நினைவு திரும்பியதும் மீண்டும் கொடூரமாக தொந்தரவு செய்வான். அதன்பின் பாதிக்கப்பட்டவரின் காது ஆபரணங்களைப் பறித்து வீட்டில் மறைத்து வைத்துக் கொள்வான். இவ்வாறு பல பெண்களை சித்திரவதை செய்து கொன்ற ராட்சசன் அமெரிக்காவில் ‘தி டேட்டிங் கேம் கில்லர்’ என்று பெயர் வாங்கிய ரோட்னி ஜேம்ஸ் அல்காலா (77) காலமாகியுள்ளான்.

மரண தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு எதிர்பார்த்திருந்த நிலையில், கலிபோர்னியாவில் உள்ள கொர்கோரன் சிறையில் இயற்கையாக மரணம் எய்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

7 பெண்களின் கொலை வழக்கில் அவன் மீது குற்றம் நிரூபணம் ஆனது. ஆனால் உண்மையில் அவன் கையால் 130 பேருக்கு மேலாக பெண்கள் கொலைக்கு ஆளானதாக அதிகாரிகள் நம்புகின்றனர் .

1968 ல் எட்டு வயது சிறுமியின் மீதும் 1974இல் 13 வயது சிறுமி மீதும் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்தான். 1978இல் ‘த டேட்டிங் கேம்’ டிவி ஷோவில் போட்டியில் பங்கு பெற்றான்.

பெண்களின் மீது கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு போட்டோ எடுத்து வைக்கும் பழக்கம் உள்ளது அவனுக்கு. அந்த டிவி ஷோவில் தன்னை போட்டோகிராபராக அறிமுகம் செய்து கொண்டான். அதில் வெற்றியும் பெற்றான். இந்த ஷோவால் அவனுக்கு தி டேட்டிங் கேம் கில்லர் என்று பட்டப் பெயர் வந்தது.

killer - 2025

1979 இல் ராபின் ஸாம்ஸே என்ற 12 வயது சிறுமியை கொலை செய்த குற்றத்துக்காக அல்காலாவுக்கு 1980ல் மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து தண்டனை ரத்தானது. 2010ல் டிஎன்ஏ பரீட்சை மூலம் அவன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால் மரண தண்டனை மீண்டும் விதிக்கப்பட்டது. அதே ஆண்டு மற்றும் நான்கு பெண்களின் கொலை வழக்கில் மரண தண்டனை நிரூபிக்கப்பட்டது. 2013இல் மற்றும் இரண்டு பெண்களின் கொலை வழக்கு நிரூபனம் ஆனதால் 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

அல்காலா ஒளித்து வைத்திருந்த பாதிக்கப்பட்ட பெண்களின் காதணிகள் அவனுடைய குற்றங்களை நிரூபிக்க உதவியதில் முக்கிய பங்கு வகித்தன. அவனுடைய வீட்டில் இருந்த நூற்றுக்கும் மேலான பெண்களின் போட்டோக்களை போலீசார் ஊடகங்களில் வெளியிட்டனர். அதில் பலரை தற்போது காணவில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories