தங்கம் வென்ற மகிழ்ச்சியில் ஆபாச வார்த்தை பேசி… சுதாரித்த நீச்சல் வீராங்கனை!

Published:

olympic keylee Mckeyown - 2026

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் வாய் தவறிய நீச்சல் வீராங்கனை…

அளவுகடந்த ஆனந்தத்தில் இருக்கும்போது ஏதேதோ உளறி விடுவோம். சற்று பொறுத்துத் தான் விஷயம் தெரிந்து நாக்கை கடித்துக் கொள்வோம். இது மனிதனின் இயல்புதான். இப்படிப்பட்ட சம்பவமே டோக்கியோ ஒலிம்பிக்ஸில் செவ்வாய்க்கிழமை அன்று நடந்தது.

100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் ஸ்விம்மிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை கேலி மெக்கன் தங்கம் வென்ற ஆனந்தத்தில் வாய் தவறி ஏதோ கூறிவிட்டார்.

பதக்கம் வென்ற பின் ஒரு மீடியா உறுப்பினர், கோல்ட் மெடல் வென்றது எவ்வாறு உள்ளது… எவ்வாறு உணருகிறீர்கள்… என்று வினவியபோது… மகிழ்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்த கேலி தவறிப்போய் சொல்லக் கூடாத ஒரு ஆபாச வார்த்தையை (F…k) சொல்லிவிட்டார். ஆனால் தான் தவறாக பேசி விட்டோம் என்பதை உணர்ந்து உடனே சமாளித்து.. மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கூறினார்.

தற்போது இந்த வீடியோ சோஷல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

தங்க மெடல் வென்றதற்காக கேலிக்கு பாராட்டு தெரிவித்துக் கொண்டிருக்கும் நெட்டிசன்கள், அளவு கடந்த ஆனந்தத்தில் இருக்கும்போது இது போன்ற பதங்களை உதிர்ப்பது இயல்புதான் என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். உணர்ச்சிவசப்படுவது யாருக்கும் இயல்பே என்பதற்கு இந்த வீடியோ நேரடி உதாரணம் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.

ஆனால் கேலி இவ்வாறு ஆபாச வார்த்தை பேசியது பற்றி அவருடைய தாயாரிடம் கேட்டபோது.. நான் அவளிடம் பேசுகிறேன் என்று அவர் தாய் கூறியது குறிப்பிடத்தக்கது.

கேலி 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியை 57.47 செகண்டில் பூர்த்தி செய்து கோல்டு மேடலை தனதாக்கிக் கொண்டார். இது இப்படி இருக்கையில்… 20 வயதாகும் கேலிக்கு ஒலிம்பிக்கில் மெடல் வெல்வது இதுவே முதல் தடவை அல்ல. இதுவரைக்குமே அவர் நான்கு முறை பதக்கம் வென்று ரெக்கார்டு ஏற்படுத்தியுள்ளார்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img