தங்கம் வென்ற மகிழ்ச்சியில் ஆபாச வார்த்தை பேசி… சுதாரித்த நீச்சல் வீராங்கனை!

olympic keylee Mckeyown - 2026

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் வாய் தவறிய நீச்சல் வீராங்கனை…

அளவுகடந்த ஆனந்தத்தில் இருக்கும்போது ஏதேதோ உளறி விடுவோம். சற்று பொறுத்துத் தான் விஷயம் தெரிந்து நாக்கை கடித்துக் கொள்வோம். இது மனிதனின் இயல்புதான். இப்படிப்பட்ட சம்பவமே டோக்கியோ ஒலிம்பிக்ஸில் செவ்வாய்க்கிழமை அன்று நடந்தது.

100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் ஸ்விம்மிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை கேலி மெக்கன் தங்கம் வென்ற ஆனந்தத்தில் வாய் தவறி ஏதோ கூறிவிட்டார்.

பதக்கம் வென்ற பின் ஒரு மீடியா உறுப்பினர், கோல்ட் மெடல் வென்றது எவ்வாறு உள்ளது… எவ்வாறு உணருகிறீர்கள்… என்று வினவியபோது… மகிழ்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்த கேலி தவறிப்போய் சொல்லக் கூடாத ஒரு ஆபாச வார்த்தையை (F…k) சொல்லிவிட்டார். ஆனால் தான் தவறாக பேசி விட்டோம் என்பதை உணர்ந்து உடனே சமாளித்து.. மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கூறினார்.

தற்போது இந்த வீடியோ சோஷல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

தங்க மெடல் வென்றதற்காக கேலிக்கு பாராட்டு தெரிவித்துக் கொண்டிருக்கும் நெட்டிசன்கள், அளவு கடந்த ஆனந்தத்தில் இருக்கும்போது இது போன்ற பதங்களை உதிர்ப்பது இயல்புதான் என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். உணர்ச்சிவசப்படுவது யாருக்கும் இயல்பே என்பதற்கு இந்த வீடியோ நேரடி உதாரணம் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.

ஆனால் கேலி இவ்வாறு ஆபாச வார்த்தை பேசியது பற்றி அவருடைய தாயாரிடம் கேட்டபோது.. நான் அவளிடம் பேசுகிறேன் என்று அவர் தாய் கூறியது குறிப்பிடத்தக்கது.

கேலி 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியை 57.47 செகண்டில் பூர்த்தி செய்து கோல்டு மேடலை தனதாக்கிக் கொண்டார். இது இப்படி இருக்கையில்… 20 வயதாகும் கேலிக்கு ஒலிம்பிக்கில் மெடல் வெல்வது இதுவே முதல் தடவை அல்ல. இதுவரைக்குமே அவர் நான்கு முறை பதக்கம் வென்று ரெக்கார்டு ஏற்படுத்தியுள்ளார்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories