December 5, 2025, 2:29 PM
26.9 C
Chennai

அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொழிலில் கவனம்: மீண்டும் ‘மாஃபா’ பாண்டியராஜன் ஆனார்!

mafoi pandiarajan - 2025

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, தொழிலில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

அ.தி.மு.க., ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் பாண்டியராஜன். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன் ‘மாஃபா’ என்ற பெயரில் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். அமைச்சரான பின் தன் வணிகப் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைத்து இருந்தார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆவடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதனால் விரக்தி அடைந்த அவர், மீண்டும் தன் வணிகப் பொறுப்புகளை தொடர முடிவு செய்துள்ளார்.

தற்போது அ.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு துணைச் செயலராக உள்ள மாஃபா பாண்டியராஜன், மாஃபா மற்றும் சி.எல்., மனிதவள நிறுவனத்தின் தலைவராக நேற்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இது குறித்து அவர் குறிப்பிட்ட போது, ‘மாஃபா’ மனிதவள நிறுவனம் ஒரு காலத்தில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இருந்தது. அமைச்சராக பொறுப்பேற்றதால் நிறுவன பணிகளில் கவனம் செலுத்தாமல் தீவிர அரசியலில் ஈடுபட்டேன். தற்போது தொழிலை கவனிக்க முடிவு செய்து பொறுப்பேற்றுள்ளேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலில் அதிக கவனம் செலுத்துவேன்.

சிறிய நிறுவனங்களை பெரிய நிறுவனங்களாக மாற்றும் ஆலோசனைகள், மனிதவளங்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளேன். இதற்காக அரசியலுக்கு சற்று ஓய்வளிக்க உள்ளேன். அதேநேரத்தில் அ.தி.மு.க.,வில் பொறுப்புகளை தொடர்கிறேன் என்றார்…

கே.பாண்டியராஜன் அறிவிப்புக்கும், நிறுவனங்களின் பொறுப்பை மீண்டும் ஏற்றதற்கும் அவரது டிவிட்டர் பதிவுகளில் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக.,வின் முன்னாள் மாநிலத் தலைவரும் தற்போதைய தெலங்காணா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தராஜனின் கணவரும் சிறந்த மருத்துவருமான டாக்டர் சௌந்தர்ராஜனும் தனது வாழ்த்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories