December 6, 2025, 2:01 PM
29 C
Chennai

ஹர்திக் பாண்டியா அணிந்திருக்கும் வாட்சின் விலை தெரியுமா?

hardik pandiya
hardik pandiya

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் தான் வாங்கியிருக்கும் புத்தம் புதிய வாட்சின் புகைப்படத்தை சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்த வாட்சின் விலை கேட்டு ரசிகர்கள் நெஞ்சடைத்து போயிருக்கின்றனர்.

இந்திய இளம் கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா கிரிக்கெட்டை போலவே மிகவும் ரசித்து வாழ்க்கையை வாழக்கூடியவர். விலை உயர்ந்த அபார்ட்மெண்ட் வீடு, ஆடம்பர கார்கள், விலை மதிப்பான பொருட்கள் என ஹர்திக் பாண்டியா வாங்கும் அனைத்துமே விலை உயர்ந்ததாகவே இருக்கிறது.

தன்னுடைய சகோதரரும் இந்திய வீரருமான க்ருணால் பாண்டியாவுடன் சேர்ந்து மும்பையில் உள்ள ருஸ்ரம்ஜி பாராமவுண்ட் சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பில் 8 படுக்கை அறைகளுடன் 3838 சதுர அடி கொண்ட 30 கோடி ரூபாய் விலை கொண்ட ஆடம்பர அபார்ட்மெண்டை வாங்கியிருந்தார்.

4 + 4 என்ற அறைகளை சகோதரர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். இதே வளாகத்தில் தான் பாலிவுட் நட்சத்திரங்களான டைகர் ஷராஃப், திஷா பட்டானி ஆகியோரின் வீடுகளும் அமைந்திருக்கின்றன.

கார் பிரியரான ஹர்திக் பாண்டியா லம்போர்கினி ஹூராகேன், ஆடி ஏ6, மெர்சிடஸ் ஏ.எம்.ஜி கி 63, போன்ற ஆடம்பர கார்களை வீட்டில் நிறுத்தி வைத்திருக்கிறார்.

watch
watch

சாதாரண மணி பார்க்கும் கடிகாரத்தை கூட மலைக்க வைக்கும் விலையில் வாங்கி வாயடைக்க வைத்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா.

இன்ஸ்டாகிராமில் ஹர்திக் வாங்கியிருப்பதாக கூறும் படெக் பிலிப் நவுடிலஸ் பிளாட்டினம் 5711 வாட்சின் விலையானது 5 கோடி ரூபாய் என்பது நம்மை திகைக்க வைக்கிறது.

அப்படி என்ன தான் இந்த வாட்சில் இருக்கிறதோ தெரியவில்லை. இந்த வாட்ச் பிளாட்டினத்தினால் ஆனது என்றும் இதில் விலைமதிப்பற்ற எமரால்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் முழுக்க முழுக்க அபூர்வமான பொருட்களால் இந்த வாட்ச் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன.

முதுகு வலியால் அவதிப்பட்ட ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நீண்ட காலமாக பவுலிங் செய்யாமல் இருந்து வந்தார். கடைசியாக இங்கிலாந்துடனான மேட்சில் தான் அவர் பந்து வீசியிருந்தார்.

எதிர்வரும் ஐபிஎல் 2021 சீசன் மற்றும் உலகக் கோப்பை டி20 தொடர் போன்றவற்றில் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஐபிஎல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்குகிறார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories