மண்மணம் மாறாத சுப்ரமணியபுரம், நாடோடிகள் சினிமா வாயிலாக ரசிகர்கள் மனதில் குடி கொண்டவர். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பெயர் எடுத்தவர்.
வெற்றி பெற்றவர்களை அனைவரும் கொண்டாடுவதும், தோல்வி அடைபவர்களை புறக்கணிப்பது இயல்பு தான்.
இந்நிலையில் கத்துக்குட்டி படத்தை இயக்கிய சரவணன், ட்விட்டரில் பதிவிட்ட நிகழ்வு ஒன்று வைரலாகி வருகிறது.
வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி கிரிக்கெட் வீரர்கள் அளவுக்கு பிரபலம் இல்லாதவர் தான், எனினும் திறன் வாய்ந்தவர். சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார், எனினும் பதக்க வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார், வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியை நேரில் சந்தித்து அவருக்கு தங்க செயின் அணிவித்து பாராட்டி உள்ளார்.