அபூர்வ பிரம்ம சிரச்சேதக மூர்த்தி சிலை கண்டெடுப்பு!

sivan 1
sivan 1

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் கிராமத்தில், பழமையான கந்தபாலீஸ்வரர் கோவில் முற்றிலும் சிதைந்து காணப்படுகிறது.

புதர் மண்டிய இக்கோவிலை, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, புதர்களுக்கு மத்தியில், மண்ணில் புதைந்திருந்த 6 அடி உயரம், 2 அடி அகலமுடைய சிலை ஒன்றை, அப்பகுதியினர் கண்டனர்.

இச்சிலை குறித்து உத்திர மேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது: இச்சிலை 11ம் நுாற்றாண்டை சேர்ந்தது.
இது, நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் இருக்கும் சிவபெருமானின் 64 அவதாரங்களில் 54வது அவதாரமான பிரம்ம சிரச்சேதக மூர்த்தி சிலை.

அதாவது புராணத்தின்படி சிவன், பிரம்மா ஆகிய இருவருக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில், பிரம்மாவின் ஒரு தலையை சிவன் எடுத்ததால், பிரம்ம சிரச்சேதக மூர்த்தி என, அவர் அழைக்கப்பட்டார்.

தமிழகத்தில் இதுவரை சிவனின் இந்த அவதார சிலை கண்டறியப்படவில்லை. இது மிக மிக அரியது. இந்த தகவலை, தமிழக தொல்லியல் துறை சென்னை அருங்காட்சியக காப்பாட்சியர் சுந்தர்ராஜன், அவரது குழு உறுதி செய்துள்ளது.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

இம்மாதிரியான அரிய வகை சிலையை, முறையாக பாதுகாக்க வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.

விஜய நகர சதி கல்வாலாஜாபாத் அடுத்த, ஊத்துக்காடு கிராமத்தில், 14ம் நுாற்றாண்டைச்சேர்ந்த விஜய நகர மன்னர் காலத்தைச் சேர்ந்த ஒரு சதி கல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

2 அடி உயரமும், 1.5 அடி அகலமும் உடையது. இக்கல்லில் வீரனின் அங்கங்களும், உடன் மனைவியின் உருவமும் வடிக்கப்பட்டு உள்ளது. அழகிய வேலைப்பாடுகளுடன் கொண்டை, பட்டாடை, அணிகலன்கள் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories