December 6, 2025, 7:08 AM
23.8 C
Chennai

வழக்கறிஞர் பாக்கெட்டிலே வெடித்த ஒன்ப்ளஸ்!

one phone
one phone

ஒன்பிளஸ் சாதனம் வெடித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு நிறுவனம் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் எதிர்காலத்தில் எந்தவொரு இழிவான உள்ளக்கத்தையும் பதிவிடவோ அல்லது பரப்பவோ கூடாது என்ற உறுதிமொழியுடன், பதிவிடப்பட்ட விஷயத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்க வேண்டும் என ஒன்பிளஸ் கேட்டுக் கொண்டது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன்
இந்த மாத தொடக்கத்தில் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் வழக்கறிஞரின் பாக்கெட்டில் வெடித்து சிதறியது.

இதையடுத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக அவர் வழக்கு தொடங்கினார். இதற்கு ஒன்பிளஸ் நிறுவனம் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தாங்கள் குலாதியை அணுக முயற்சித்தோம், பலமுறை முயற்சித்தும் அவரை அணுக முடையவில்லை எனவும் ஒன்பிளஸ் குறிப்பிட்டுள்ளது.

one
one

தில்லியை சேர்ந்த வழக்கறிஞரின் கவுனில் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனம் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வானது புதுதில்லியில் உள்ள நீதிமன்ற அறை ஒன்றில் புதன்கிழமை நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பயனர் சம்பவத்தின் விவரங்களை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து ஒன்பிளஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

புகை வருவதை உணர்ந்த வழக்கறிஞர்
ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி தீப்பிடித்ததாக தொடரப்படும் இரண்டாவது வழக்கு இதுவாகும். முன்னதாக வெடித்த நிகழ்வு கடந்த மாதம் ஆன்லைனில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஒன்பிளஸ் சாதனம் வெடித்து குறித்து டுவிட்டரில் பகிரப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது போன் வெடிப்பு சம்பவம் குறித்து கேட்ஜெட் 360 தளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் கவ்ரவ் குலாட்டி தனது அறையில் அமர்ந்திருந்த போது அவர் கவுனின் பாக்கெட்டில் இருந்த வெப்பம் வருவதை உணர்ந்திருக்கிறார். வெப்பம் உடலில் படுவதை உணர்ந்த போது தனது பாக்கெட்டில் இருந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனத்தை எடுத்து அதில் இருந்து புகை வருவதை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

அதன்பின், தான் உடனடியாக கவுனை தூக்கி போட்டதாகவும், பின் தானும் தன் சகாக்களும் ஸ்மார்ட்போனின் அருகில் சென்றபோது, அது வெடித்ததாக தெரிவித்துள்ளார்.

onepluse
onepluse

இதையடுத்து முழு அறையும் புகையால் நிரம்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெடித்த சாதனத்தை குறிப்பிட்ட சில தினங்களுக்கு முன்புதான் பயன்படுத்த தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்
தற்போது வெடித்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனம் ஆகஸ்ட் 23, 2021 அன்று வாங்கப்பட்டது. தற்போது வெடித்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனத்தின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்துள்ளார்.

புதிய ஸ்மார்ட்போனை பயன்படுத்தி சில தினங்களே ஆனதாக கூறிய அவர் பழைய தொலைபேசியில் இருந்து தரவை கூட மாற்றவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி வெப்பம் வெளிவரத் தொடங்கிய போது பயன்பாட்டில் இல்லை எனவும் சார்ஜிங் நிலையில் கூடவில்லை என பகிர்ந்துள்ளார். தற்போது வரை அதிர்ச்சியில் இருக்கிறேன் எனவும் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து ஒன்பிளஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் அமேசான் நிர்வாகிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதாக கூறினார். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து மைஸ்மார்ட் பிரைஸ் தளம் முதலில் பகிர்ந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories