கோயில்களில் பக்தர்களுக்கு மூன்று நாள் வாரவிலக்கு தொடரும்! ஸ்டாலின் அறிவிப்பு!

nellaiappar temple
nellaiappar temple

கோயில்களில் பக்தர்களுக்கு வாரம் மூன்று நாள் தரிசனத்துக்கு தடை தொடரும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப் படுவதாகவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்து, அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நவம்பர் 1-ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது மன அழுத்தத்தையும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுனர்கள், பெற்றோர் கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் பள்ளிகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது.

அதே போன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் நடத்தவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள், கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும், குடமுழுக்கு, திருவிழா உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு விதித்த தடை தொடர்வதாகவும் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories