December 6, 2025, 3:33 PM
29.4 C
Chennai

கொரோனா கால சேவைக்கு ஆயுஷ் அமைச்சக விருது! வழங்கினார்… ஆளுநர் தமிழிசை!

ayush award
ayush award

யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனையின் கைநுட்பத் துறையின் தலைவர் டாக்டர் ஒய் தீபாவுக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுவையின் துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வழங்கியுள்ளார்.

யோகா, இயற்கை மருத்துவம் ஆகியவை காலம் காலமாக இருக்கக் கூடிய மகத்துவ மருத்துவங்களில் ஒன்றாகும். இவை இரண்டுமே உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகும்.

இந்த இரு மகத்துவங்கள் குறித்து ஒரு சிலரே அறிந்திருந்த நிலையில், பலர் அறிந்தும் பயன்படுத்தாமல் இருந்த நிலையில் கொரோனா எனும் கொடிய நோய் இவற்றின் பயன்பாட்டையும் உன்னதத்தையும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்தில் இயற்கையில் கிடைக்கும் மஞ்சள், இஞ்சி, நெல்லிக்காய், மிளகு, உள்ளிட்டவற்றை டீ போல் காய்ச்சி வடிகட்டி குடித்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என யோகா மற்றும் இயற்கை மருத்துவம் அறிவுறுத்தி வந்தது.

அது போல் பல மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்த நோயாளிகளுக்கு இவர்கள் கற்று தந்த மூச்சு பயிற்சி, நாடி சுத்தி பிராணயாமா, டயாபிராக்மடிக் சுவாசம் உள்ளிட்டவை அவர்கள் வென்டிலேட்டரை தூக்கி எறிந்துவிடும் இயற்கையாக சுவாசிக்க வழி வகுத்தன.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளால் தங்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் இருந்த போதிலும் செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவல் துறையினர் என கொரோனா போராளிகளாக அறியப்பட்டனர்.

அந்த வகையில் ஒவ்வொரு கொரோனா வார்டுகளுக்கும் சென்று இயற்கை பானங்கள், இயற்கை உணவுகள், யோகா. மூச்சுப் பயிற்சி, மூக்கை சுத்தம் செய்யும் பயிற்சி, தொண்டையை சுத்தம் செய்யும் பயிற்சி ஆகியவற்றை கற்றுக் கொடுத்தது.

சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனை குழு. இந்த மருத்துவமனையின் கைநுட்பத் துறையின் தலைவர் டாக்டர் ஒய் தீபாவுக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் கோவிட் காலத்தில் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை புதுவை துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழசை சவுந்திரராஜன், டாக்டர் தீபாவுக்கு நேற்று வழங்கினார்.

இதுகுறித்து டாக்டர் தீபா கூறுகையில் இந்த விருதை அளித்த ஆயுஷ் அமைச்சகத்திற்கு நன்றி. டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கைகளால் இந்த விருதை வாங்கியதில் பெருமிதம் கொள்கிறேன்.

அதிலும் தமிழிசை அவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் குறித்து பாராட்டி பேசியதை எண்ணி சிலாகித்து போனேன். இந்த மருத்துவ முறையை வாழ்வியல் முறையாக கடைப்பிடித்தாலே அறுவை சிகிச்சை தேவைப்படாது, கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்கள் வராமல் தடுக்கலாம் என மிகவும் அழகாக தமிழிசை தெரிவித்தார்.

மேலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் கோட்பாடுகளையும் அவர் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் அதாவது 2020 மார்ச் மாதம் வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இயற்கை முறையில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினோம். 250-க்கும் மேற்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1000- க்கும் மேற்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தோம்.

இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானங்களை கொடுத்து கொரோனாவிலிருந்து மீள்வதற்கான அக்குபிரஸர், அக்குபஞ்சர், சூரிய குளியல், அரோமா தெரபி, நீராவி, சுடு நீர் மூலம் வாய் கொப்பளித்தல், மூச்சு பயிற்சி உள்ளிட்ட சிகிச்சைகளையும் கொடுத்தோம்.

தமிழகம் முழுக்க கொரோனா வார்டுகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்துள்ளோம். டாக்டர் தமிழசை அளித்த சிறப்புரையில் அவர் கூறிய கருத்துகள் இளைஞர்களை நிச்சயம் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பக்கம் திரும்ப வைக்கும்.

இந்த விருதுகள் எங்கள் மருத்துவ முறைக்கான அங்கீகாரம் என்றார் டாக்டர் தீபா. இவருடன் சேர்த்து அந்த மருத்துவமனையின் டாக்டர் அருந்ததி மற்றும் டாக்டர் ராஜலட்சுமி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories